Wednesday, August 09, 2006

பிடல் கஸ்ரோவின் ஊழி முடிவுக்கு வந்துவிட்டதா?

ஒரு பருந்தின் நிழலின் கீழ் இருந்து கொண்டு ஒரு கோழிக் குஞ்சு பருந்தின் கண்ணில் விரலைவிட்டு ஆட்ட முடியுமா? முடியும் என்கிறார் கியூபாவின் ஆட்சித் தலைவராக நேற்றுவரை இருந்த பிடல் காஸ்ட்ரோ!

கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்க ஆட்சித் தலைவர்களின் தூக்கத்தைக் கெடுத்து வரும் பிடல் காஸ்ட்ரோ முதல் முறையாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்துள்ளார்.

சிறு குடலில் குருதிப் பெருக்கினால் துன்பப்பட்ட காஸ்ட்ரோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை வைத்தியம் செய்யப்பட்டது. அவர் தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அரச அடிப்படையில் அறிக்கை எதுவும் விடுக்கப் படவில்லை.

மருத்துவமனைக்குப் போகுமுன்னர் தனது ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தனது இளவல் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைந்திருந்தார்.

பிடல் காஸ்ட்ரோ பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவர்தான் உலகின் நீண்டகால அரசுத் தலைவர் என்ற பெயரை எடுத்தவர். 1959 ஆம் ஆண்டு சனவரி 1 நாள் கியூபாவில் நடந்த புரட்சியைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரம் அவர் கையில்தான் இருந்து வந்தது.

சிஅய்ஏ உளவு நிறுவனம் மேற்கொண்ட கொலை முயற்சியில் இருந்து தப்பி இருக்கும் ஒரே ஆட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒருவர்தான். 638 க்கும் மேலான தடவை சிஅய்ஏ அவரைக் கொலை செய்த முயற்சி செய்தது. ஆனால் வெற்றிபெற முடியவில்லை.

இன்று உலகில் எஞ்சியுள்ள பொதுவுடமை நாடுகளில் கியூபாவும் ஒன்று. ஏனையவை வடகொரியாவும் சீனக் குடியரசும் ஆகும். சீனாவைப் பொறுத்தளவில் அரசியல் மட்டத்தில்தான் அது ஒரு பொதுவுடமை நாடு. பொருளாதார மட்டத்தில் அதுவொரு பச்சை முதலாளித்துவ நாடாகும்.
கியூபா எப்படிப்பட்ட நாடு? அல்லது தீவு?

அழகான பொருள்கள் எல்லாம் கண்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. பாடும் குயில்கள், ஓடும் ஆறுகள், பேசும் கிளிகள், கொட்டும் அருவிகள், பூத்துக் குலுங்கும் மலர்கள், தலை சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்கள், இதமாக வீசும் தென்றல் போன்றவை கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக இருக்கின்றன.

மகாகவி பாரதியார் தாம் பாடிய குயில் பாட்டில் மங்கை ஒருத்தியின் மேனி நலத்தினையும் வெட்டினையும் கட்டினையும் தேனில் இனியாள் திருத்த நிலையினையும் மற்றவர்க்கு சொல்ல வசமாமோ? எனக் கேட்டு விட்டு கற்றவர்க்குச் சொல்கிறார்-

கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே,
பண்கூத் தெனுமிவற்றின் சாரமெல்லாம் ஏற்றி
அதனோடே இன்னமுதைத் தான் கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்……………………………

பாரதியார் கியூபா தீவைப் பார்தததில்லை. அந்த வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. கிட்டியிருந்தால் நல்லதோர் கவிதை ஒன்றைக் கட்டி இருப்பார். கியூபா தீவு அவ்வளவு கொள்ளை அழகு. அதன் இதமான காலநிலை, சுற்றிலும் நீலக்கடல், பால்போல் விரிந்து கிடக்கும் கடற்கரை, சல சல என ஓடும் ஆறுகள் ஆகியவை அந்தத் தீவை பூலோக சொர்க்கமாக மாற்றிக் காட்டுகிறது. நான் நேரில் பார்த்த உண்மை இது.

கியூபாவின் வரலாறு பற்றி ஒரு பருந்துப் பார்வை பார்க்கலாம்.

1492 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் கியூபாவைக் கண்டு பிடித்து அது இசுப்பானிய அரசருக்கு சொந்தமானது என்று உரிமை கோரினார். அதன் பின் 400 ஆண்டுகள் இசுப்பானியா கியூபாவை ஆட்சி செய்தது.

1868 -1878 – கியூபன் புரட்சிப் படை இசுப்பானிய ஆட்சியை எதிர்த்து 10 ஆண்டுகள் போரிட்டது. இசுப்பானிய அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர ஒத்துக் கொண்டது.

1895 - கியூபன்ஸ் மறுபடியும் இசுப்பானியாவுக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போரை தொடங்கினார்கள்.1898 - அமெரிக்கா கியூபாவோடு சேர்ந்து கொண்டு இசுப்பானியாவை தோற்கடித்தது. இசுப்பானியா கியூபா மீதான ஆட்சியுரிமைக் கைவிட்டது.1898 – 1902 கியூபாவில் அமெரிக்க இராணுவ ஆட்சி.

1902 - கியூபா குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. Toms Estrada Palma என்பவர் அதன் முதல் ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1903 – ஒரு உடன்படிக்கை மூலம் அமெரிக்கா Guantanamo வளைகுடாவை நிரந்தரமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது.

1933 - Fulgencio Batista Zaldivar ("Batista") புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். 1959 - பிலடல் காஸ்ரோ தலைமையில் புரடசி;ப்படை பஸ்ரியாவை கவிழ்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. 1961 - பிடல் காஸ்ட்ரோ கியூபாவை ஒரு பொதுவுடமை நாடாகப் பிரகடனப்படுத்தினார். இதே ஆண்டு அமெரிக்க சிஅய்ஏ உளவு நிறுவனம் கியூபா எதிர்ப்பாளர்களது உதவியுடன் கியூபாவைக் கைப்பற்ற முயற்சி எடுத்தது. ஆனால் அது படு தோல்வியில் முடிந்தது.

1962 - கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையைக் கொண்டுவந்தது. இதன்படி அமெரிக்க குடிமகன் எவரும் கியூபாவோடு வாணிகம் செய்யவும் அந்த நாட்டுக்குப் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதே ஆண்டுதான் கியூபாவிற்கு ஏவுகணைகளைக் கொண்டு சென்ற சோவியத் கப்பல்கள் அமெரிக்காவினால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு அணுவாயுதப் போர் மூளுவது தவிர்க்கப்பட்டது.

1976 - கியூபா புதிய அரசியல் யாப்பை எழுதிக் கொண்டது. அதன்படி கியூபா கம்யூனிஸ்ட் கட்சியே நாட்டின் முதன்மையான அதிகார மையம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1980 - கியூபாவை விட்டு 125,000 கியூபன்ஸ் அமெரிக்காவிற்கு படகுகளில் ஏறித் தப்பி ஓட்டம்.

1991 - சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. கியூபாவுக்குக் கிடைத்து வந்த பொருளாதார உதவி நிறுத்தப்படுகிறது. பொருளாதாரம் சீர்குலைந்தது.

1993 - கியூபா பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்கிறது. அதன்படி தனியாட்கள் வாணிகம் நடத்த அனுமதிக்கப் பட்டார்கள்.

1994 - மீண்டும் கியூபன்ஸ் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அடைகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் 20,000 கியூபன்சை அமெரிக்க நாட்டுக்குள் அனுமதிக்கும் உடன்பாடு ஒன்று இரண்டு நாடுகளுக்கும் இடையில் எழுதப்பட்டது.

1998 - போப்பாண்டவர் இரண்டாவது சின்னப்பர் கியூபாவுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த பயணம் ஒன்றை மேற்கொண்டார். அறுபதுகளில் மத சுதந்திரம் கியூபாவில் தடை செய்யப்பட்டது.

இன்றைய கியூபா பற்றி சில தரவுகளைப் பார்ப்போம்.மக்கள் தொகை – 113,46,670 (2005 ஆம் ஆண்டு மதிப்பீடு) (இலங்கை 190 இலட்சம்)

இனங்கள் - கலப்பினம் - 51 விழுக்காடு (Mulatto 51%)
- வெள்ளையர் - 37 விழுக்காடு
- கருப்பர் - 11 விழுக்காடு
- சீனர் - 1 விழுக்காடு

நிலப்பரப்பு - 110,922 சதுர கிமீ ( 43,000 சதுர கல் ) இலங்கை 65,610 சதுர கிமீ (25,332 சதுர கல்)

அரச மொழி - இசுப்பானீயா

படித்தவர்கள் - 98 விழுக்காடு

மருத்துவர்கள் - 65,000 (200 பேருக்கு ஒரு மருத்துவர்)

தலைநகரம் - ஹவானா

சமயம் - கத்தோலிக்கம் (85 விழுக்காடு)

தேசிய வருமானம் தலைக்கு - 1260 அ. டொலர்கள் (இலங்கை 750 அ.டொலர்கள்)

சராசரி அகவை - 76.21 ஆண்டு

கியூபா மக்கள் தொகையில் 10 இல் ஏழு பேர் 1959 புரட்சிக்கு பின்னர் பிறந்தவர்கள். ஒரு துன்பியல் செய்தி. கியூபா தீவின் பூர்வீக குடிகள் இன்று இல்லை. அந்தத் தீவைக் கண்டு பிடித்த இசுப்பானியர் ஒருவர் மிஞ்சாமல் அவர்களைக் கொன்று ஒழித்து விட்டார்கள்! அந்தத் துன்பியலை இன்னொரு தருணத்தில் சொல்லுவேன்.

காஸ்ரோவின் ஊழி முடிவுக்கு வந்துவிட்டதா? ஆம் என்பதே இதற்குப் பதில் ஆகும். எண்பது வயதை எட்டிவிட்ட காஸ்ட்ரோவின் உடல் நலம் பழைய நிலைக்குத் திரும்பினாலும் ஆட்சி மீது அவர் வைத்திருந்த பிடி திரும்ப வாய்ப்பில்லை.

பொதுவாக ஒரு கட்சி ஆட்சியுள்ள நாடுகளில் அதன் தலைவர் மறைய நேர்ந்தால் பாரிய அரசியல் - பொருளாதார மாற்றங்கள் ஏற்படுவது இயல்பாகும்.

சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரி ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் பலத்த கண்டனத்துக்கு உள்ளானார். தனது அரசியல் எதிரிகளை கேட்டுக் கேள்வியின்றி தீர்த்துக் கட்டியவர் என்ற குற்றச் சாட்டுக்கள் அவர் மீது வீசப்பட்டன.

மாசே துங்கின் கதையும் அதுதான். அவரது மறைவுக்குப் பின்னர் சீனாவின் பொருளாதாரக் கொள்கை தலை கீழ் மாற்றம் கண்டது. அவரால் ஓதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்சித் தலைவர்கள் மாசே துங்கின் ஆதரவாளர்களை தூக்கி எறிந்து விட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

இதே போல் யூகோசிலாவிய சோசலீச குடியரசின் ஆட்சித் தலைவர் ரிட்ரோ மறைந்த பின்னர் அந்த நாடு சிதறத் தொடங்கியது.

கியூபாவில் தனிக்கட்சி ஆட்சி நடைபெறுவதால் அங்கு அரை நூற்றாண்டு காலமாக மக்களின் உண்மையான நாடித் துடிப்பைக் கணிக்கும் வாய்ப்பில்லாது போய்விட்டது. பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் இல்லை.

சுதந்திரமான ஊடகங்கள் இல்லை. மனிதவுரிமை பேணப்படுவதில்லை. காஸ்ட்ரோவின் கம்யூனிச ஆட்சிக்கு வெளிப்படையான எதிர்ப்பு இல்லை. உள்ளுர இருக்கலாம். ஆனால் முறையான தேர்தலைக் கண்டிராத நாட்டில் எதிர்ப்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிவது கடினம்.
காஸ்ட்ரோவின் கம்யூனிச ஆட்சியை விரும்பாதவர்கள் அந்த நாட்டை விட்டு ஓடி விட்டார்கள். அவர்கள் எல்லோரும் இப்போது புளரிடா, மியாமி, நியூ யோர்க், இலினோய் மற்றும் கலிபோர்னியா போன்ற நகரங்களில் வாழ்கிறார்கள்.

கியூபாவில் இருந்து ஓடி வருபவர்களுக்கு அமெரிக்கா அண்மைக் காலம் வரை மறு கேள்வி கேட்காது குடியுரிமை வழங்கி வந்தது.

அமெரிக்காவில் இப்போது பத்து இலக்கம் கியூபன்ஸ் வாழ்கிறார்கள். இதனால் புளரிடா மாநிலத்தில் உள்ள பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை கியூபானியர் தீர்மானிக்கிறார்கள்!

மிக அண்மையில் (2005) Forbes என்ற அமெரிக்க சஞ்சிகை காஸ்ட்ரோ உலகளாவிய கோடீசுவரர்களது பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருக்கிறார் எனச் செய்தி வெளியிட்டது. அவரது சொத்தின் பெறுமதி 900 மில்லியன் அமெரிக்க டொலர் என அது மதிப்பிட்டது. அதாவது 11 ஆவது இடத்தில் வைக்கப்பட்ட பிரித்தானியா அரசி இரண்டாவது எலிசபெத்தின் சொத்தின் பெறுமதியை விட இரண்டு மடங்கு. இந்தச் செய்தியில் உண்மை இல்லை.
பிடல் காஸ்ட்ரோ மிக எளிய வாழ்க்கை வாழ்கிறார். சாதாரண இராணுவ உடையை அணிகிறார். அவரது பெரிய ‘கட் அவுட்’ டுகளை அல்லது சிலைகளை கியூபாவில் எங்குமே பார்க்க முடியாது. சுற்றுலா அங்காடிகளில் சிறிய புகைப் படங்கள் மட்டும் விற்கப்படுகின்றன.

ஒரே ஒரு தலைவரது பெரிய படங்கள் சிலைகள் மட்டும் முக்கிய சதுக்கங்களில் காணப்படுகின்றன. அவர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். கியூபா புரட்சியின் போது காஸ்ட்ரோவின் வலது கையாக விளங்கியவர். புரட்சிக்குப் பின்னர் பதவி எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பொல்வியா சென்று அங்கு ஆட்சியைக் கவிழ்க்கப் போராடி இறந்த சே குவாரா. இதனால் காஸ்ரோவை விட சே குவாராவே புரட்சியாளர்களது மானசீக குருவாக விளங்குகிறார்.

புரட்சிக்குப் பிந்திய கியூபாவின் பொருளாதாரம் நொடிந்து போய் உள்ளது. மக்களின் உணவு உடை உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் பெருமளவு நிறைவு செய்யப்பட்டாலும் கியூபா ஒரு ஏழை நாடாகவே இருக்கிறது. நேரில் கியூபாவைப் பார்த்தவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

நாற்பத்து எட்டு ஆண்டுகள் கழிந்தும் கியூபா நாட்டு மக்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படவில்லை என்பது ஒரு சோக வரலாறுதான்.

கியூபாவில் தனி மனித மாத வருமானம் 40 பேசோ தொடக்கம் 400 பேசோ வரை இருக்கிறது. 27 பேசோ ஒரு அமெரிக்க டொலர் என்ற விழுக்காட்டில் 400 பேசோ வருமானம் 15 அமெரிக்க டொலரைவிடக் குறைவாகவே இருக்கும். ஒரு மருத்துவரது சம்பளமும் இதுதான்.

கியூபாவுக்கு சுற்றுலா போகிறவர்கள் ஒரு ஹோட்டல் ஊழியருக்கு ஒரு அமெரிக்க டொலரை அன்பளிப்பாகக் கொடுத்தால் அது அவரது 4 நாள் சம்பளத்துக்கு சமமாக இருக்கும்.சுற்றுலாத்துறைக்குப் பெயர் போன கியூபாவில் ஹோட்டல் ஊழியர்கள் ஒரு மருத்துவர் உழைப்பதை விடக் கூடுதலாக சம்பாதிக்கிறார்கள். பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசிகளே இப்படியான வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை கியூபாவின் பொருளாதரத்தைப் பாதித்துள்ளது என்பது உண்மைதான். இந்தத் தடையால் அந்நிய முதலீடு வரண்டு போனது. அதனல் தொழில்துறை பாதிக்கப்பட்டது. ஆனால் வேளாண்மைத் துறையில் கூட கியூபா பாரிய முன்னேற்றத்தை எட்டவில்லை.ஒரு சோசலீச நாட்டில் எல்லோரும் சமம் எல்லோரும் ஓரு நிறை என்பது வறுமையைப் பங்கிட உதவுகிறதே ஒழிய செல்வத்தைப் பங்கிட உதவுவதில்லை.

ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் பொருள் உற்பத்தையைப் பெருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் பெரிய அப்பத்தை மக்களுக்குப் பங்கிடலாம். ஆனால் இது சோசலீச பொருளாதாரத்தில் நடைபெறுவது இல்லை. எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கம் எவரும் எதற்கும் பொறுப்பில்லை என்றாகி விடுகிறது.

ஒருவன் கூட்டுப் பண்ணையில் காட்டுகிற அக்கறைக்கும் தன் சொந்தக் காணியை உழுது விதைத்து அதன் பலன் முழுவதையும் தனக்கே வைத்துக் கொள்ளக் காட்டுகிற முயற்சிக்கும் நிறைய வேற்றுமை இருக்கிறது. இது மனித சுபாவம். அதனை அரசியல் - பொருளாதாரத் தத்துவங்கள் மாற்ற முடியாது.

காஸ்ட்ரோவின் மறைவுக்குப் பின்னர் கியூபாவில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படாவிட்டாலும் பொருளாதார மாற்றங்கள் இடம்பெறும் என நிச்சயம் சொல்லலாம்.

ராவுல் காஸ்ட்ரோ தாராள பொருளாதார கொள்கைகளில் நம்பிக்கை உடையவர் எனச் சொல்லப்படுகிறது. எனவே காஸ்ட்ரோவிற்குப் பிறகு இடம்பெறப் போகும் மாற்றங்கள் இடம் பெறலாம். ராவுல் காஸ்ரோ மறைந்த பின்னர்தான் அரசியல் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

கியூபாவில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கவிழ்க்கும் அமெரிக்காவின் திட்டம் இன்னும் கைவிடப்படவில்லை.
உலகில் சிறந்தது நாட்டியக் கலையே! ஆடல் அழகி யாழினியின் அரங்கேற்றம்!

திருமகள்

தை: தத்த தை, தாம்தை, தத்த தை, கிடதகதாம், தித் தாம்;

கிடதகதை, தத் தாம் தை,

தாகத ஜம்தரி தா, ததகத ஜம்தரி தை,

ததிகின தோம்-தக ததிகின தோம்-தக திகுததி கிணதோம்

தாம், , தை, தத்த தாம், ,

திகிதக திகிதக திகிதக திகிதக திகிதக திகிதக

திகிதக திகிதக திகிதக திகிதக தளாங்கு தகதிது தோம்

என்ன பார்க்கிறீர்கள்? திருமகள் சில காலம் கழித்து அரங்கேற்றம் பார்த்தது போல் தெரிகிறதா?

நீங்கள் நினைப்பது சரி. கிழமை இறுதியில் செல்வி யாழினியின் அரங்கேற்றம் பார்த்தேன். சுவைத்தேன், களித்தேன், மலைத்தேன், திளைத்தேன் அதுபற்றி எழுதலாம் என நினைத்தேன்! மேலே தந்திருப்து யாழினி ஆடிய அலாரிப்பு சொற்கட்டு!

தமிழ் உணர்வாளர் திரு. இராசகுலசிங்கம் (பாபு) அவர்களின் திருமகள் யாழினியின் அரங்கேற்றம் தங்களுடைய வீட்டு அரங்கேற்றம் என நினைத்து நிகழ்ச்சி தொடங்கு முன்னரே 1,700 பேர் கொள்ளக் கூடிய கலைக்கான ரொறன்ரோ மைய அரங்கத்தை நிறைத்து விட்டார்கள்.

வழக்கமான பூசை, மங்கள விளக்கேற்றல், அமைதி வணக்கம் நடந்து முடிந்த பின்னர் நட்டுவனார் (நடன ஆசிரியை) தனது மாணவிக்கு இரு கால்களுக்கும் சலங்கை கட்டி விட்டார். இதனை சலங்கை பூசை என்று அழைப்பர். பூசை என்ற தனித்தமிழ் சொல்லை சமற்கிருத சொல் எனக் காட்டுமாறு அதனை பூஜை என வடமொழிப் பற்றாளர்கள் உச்சரிக்கிறார்கள்.

வெண்கலம் செம்ப மற்ற வெள்ளியும்
மூன்றிலொன்றால்பங்கிய நஷ்ற்சுரங்கள் பலுகவே யழகாய்ச் செய்தகிண்கிணி தனக்குத் தாரா கணமதி தெய்வமாங்
கருங்கயி றதனிற் கோத்திட உறுதியாய் முடிச்சைப் போடே…….

என்று மகபரத சூடாமணி என்கிற நூலில் கிண்கிணி என்கின்ற சலங்கையின் அழகுகள் சொல்லப்பட்டுள்ளது. வெண்கலம், செம்பு, வெள்ளி இம் மூன்றினுள் ஒன்றால் கிண்கிணி செய்யப்பட்டிருக்கும். வலது காலுக்கு நூறுசலங்கையும் இடது காலுக்கு இருநாறு சலங்கையும் கட்டி ஆடுதல் வேண்டும். ஆனால் நாகரிகம் மிகுந்து நேரம் அருமையாகி விட்ட இந்தக் காலத்தில் பாட்டில் சொன்னது போல் யாரும் கிண்கிணி கட்டி ஆடுவதில்லை.

நிகழ்ச்சிகளை சுதர்சன் துரையப்பா தொகுத்து வழங்கினார். சுதர்சன் அரங்கேறிய நர்த்தகர். அதனால் நடனம் பற்றிய தரவுகளை சாங்கோ பாங்கமாக அவ்வப்போது எடுத்து விளக்கினார். ஆனால் அதனை பெரும்பாலும் ஆங்கிலத்தில் சொன்னதுதான் சோகம். நடனம் எங்கள் மண்ணில் விளைந்த ஒரு கலை என்பது உண்மையானால் அந்த மண்ணிற்குச் சொந்தமான தமிழில்தானே அதனை விளக்க வேண்டும்?

இப்போதெல்லாம் நட்டுவனார்கள் நடனத்தையே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள். காரணம் நடனம் கற்கும் மாணவர்களுக்கு தமிழ் தெரியாது!

நிகழ்ச்சி தோடய மங்களத்தோடு தொடங்கியது. இது ஆடல்மகள் உள்ளே இருந்து வெளியே வருவதற்கு முன்னாள் பாடகரும் பக்கவாத்தியக்காரர்களும் சரியாகச் சேர்ந்து இசைவதற்கும் மங்களத்திற்காகவும் பாடுவதாகும், இதனை மேளம் கட்டுவது என்றும் சொல்வர். இந்த நிகழ்ச்சியை நட்டுவனார் ஒரு மணி நேரம் செய்வார். ஆனால் அது இப்போது அய்ந்து மணித்துளியோடு முடிந்து விடுகிறது,

அடுத்து மலர்வணக்கம் (புஷ்பாஞ்சலி) தொடங்கியது. கைகளில் மலரை ஏந்திக் கொண்டு கடினமான கால்களில் அடைவுகளை (foot-steps) காட்டி அரங்கம் முழுதும் சுற்றி வந்து செய்கும் நடனமாகும். அடவு என்ற சொல் ஆடல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது.

அடுத்து அலாரிப்பு. அலாரிப்பு இல்லாத நடன நிகழ்ச்சியை இன்று பார்க்க முடியாது. அலாரிப்பு என்றால் தயார்படுத்திக் கொள்ளல் என்பதே பொருள். அதனை ஆங்கிலத்தில் warm-up என்று திரு. சதர்சன் மொழிபெயர்த்துச் சொன்னார். அலாரிப்பு ஜதியினை சொற்கட்டு என்று சொல்வார்கள்.

இந்த இடத்தில் ஒரு ஆடல் மகளுக்கு இருக்க வேண்டிய அழகுகளைச் சற்றுப் பார்க்கலாம்.

மன்னர் முதல் மூன்று குலத்தில் உதித்த சிவந்த நிறமும் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஒளிமுகத்தை உடையவளாகவும் அன்னம் போன்றவளாகவும் அரச கட்டிலின் முன்னே பத்து முழம் விட்டு கீழ்த்திசையில், திரையை நீக்கி, முழுநிலவு போலவும் பூத்த வஞ்சிக்கொடி போலவும் கார்மேகம் திறந்து மின்னல் வெளிப்பட்டது போலவும் விளங்கத் தோன்றுவாள். மிகப்பருத்தல், மிக இளைத்தல், மிக உயரம், மிக குறுகல் இல்லாத உடலும் தக்க வடிவமும் சிறந்த மார்பகங்களுடன் அறிவு உரம் பெற்றவளாயும் தாள சுரஅறிவு, பரந்த நெற்றி, உடல் அமைப்பு, முக மலர்ச்சி இவற்றை உடையவளாய் இருததல் வேண்டும். (அபிநய தர்ப்பணம்)

பண்டைய காலத்தில் இருந்து தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும் 64 கலைகளில் ஒன்றான ஆடல்கலையே இன்று பரதம் என அழைக்கப்படுகிறது.

பாவம், இராகம், தாளம் என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து “பரதம்” ஆகியது என்று சொல்கிறார்கள். தமிழ் இலக்கியங்களில் இதனை கூத்து, ஆடல், நடம், நர்த்தனம், நிருத்தம் என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இதனை சதிர் என்றும் சின்னமேளம் என்றும் அழைத்தார்கள்.
அண்மைக் காலமாகவே இந்த நாட்டியம் “பரத நாட்டியம்” எனக் குறிக்கப்பட்டு உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்த மூன்று சொற்களும் நாட்டியத்தின் முக்கிய கூறுகளாகும்.

இந்த நடனத்தை சிவபெருமான் பிரமனுக்கு கற்பித்தார் என்றும், பிரமன் பரதமாமுனிவருக்கு (தண்டு முனிவர்) கற்பித்தார் என்றும், பரதர் அதனை கந்தருவர் அப்சரஸ் முதலிய விண்ணுலக வாசிகளுக்கு கற்பித்தார் என்றும் கூறப்படுகிறது. சிவபெருமானுக்கே உரித்தான தாண்டவ நடனத்தை சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்க நந்திகேசுவரருக்குக் கற்பித்தார்.

இவை யாவும் பின்னால் நடனக் கலைக்கு ஒரு தெய்வீகத்தைக் (ஆகமத்தை அருளியவர் சிவபெருமான் என்பது போல) கற்பிக்க நினைத்தவர்களது கற்பனையாகும். பரதக் கலை யாருக்குச் சொந்தம், தமிழருக்கா வடமொழியாளருக்கா? என்ற சிக்கலுக்குள் நான் நுழைய விரும்பவில்லை. அதற்குத் தோதான இடமும் இது இல்லை. ஆனால் ஆடல்மகளிரது உடையை வைத்தே இது யாருடைய கலை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்!

தமிழ்நாட்டில் பரதம் தஞ்சை, திருவாருர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் வளர்ந்து பரவியது. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 11 ஆம் நூற்றாண்டுவரை தேவடியார் (தேவதாசிகள்) எனப்படும் பெண்கள் கோயில்களில் நடனமாடினார்கள். இராசராசன் காலத்தில் ஏராளமான பெண்கள் கோயில்களில் நடனம் ஆடுவதற்கு அமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. இவர்கள் ஆடல், பாடல், இசைக்கருவிகள் முதலியவற்றை முறைப்படி கற்றுத் தேறியவர்கள். குமுதாயத்தில் அவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது.

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் திருவாரூர் திருக்கோயிலில் இருந்த உருத்திரக்கணிகையர் குலத்தைச் சேர்ந்த பரவைநாயகியை கண்டு காதலித்து மணந்தார் எனத் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) கூறுகிறது.
பரத நாட்டியத்தில் மட்டுமே கர்நாடக இசையில் உள்ள 35 இராகங்களும் 108 வகையான தாளங்களும் நாட்டிய உருப்படிகளும் உள்ளன.

ஆடல்மகளிருக்கு இயற் தமிழிலும், இசைத் தமிழிலும் ஓரளவு அறிவு இருத்தல் வேண்டும். மொழித் தேர்ச்சி இல்லாவிட்டால் மெய்ப்பாடுகளை சரிவர வெளிக்காட்ட முடியாது.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதையில் ஆடலும் பாடலும் அழகும் இம்மூன்றின் ஒன்று குறைபடாமல் ஏழ் ஆண்டு இயற்றி, பன்னிரண்டாம் அகவையில் மன்னன் முன்னிலையில் மாதவி அரங்கேறினாள். அப்போது மேடையில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.

இருவகைக் கூத்தின் (அகக் கூத்து, புறக் கூத்து) இலக்கணம் அறிந்த ஆடல் ஆசான்.

யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை, ஆடலோடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் பாடக்கூடிய இசை ஆசிரியன்.
இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறிய தமிழ் முழுது அறிந்த தன்மையன்
ஆகி, வேத்து இயல் பொது இயல் என்று இரு திறத்தின் நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்து, இசைப் புலவன் ஆளத்தி வைத்த பண்ணின் தன்மையை முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையைறையும் நீர்மையும் என்னும் பதினோரு கூறுகளையும் அறிந்து, இசையோன் தாள நிலையில் எய்த வைத்து ஓசை தன் கவியிடத்தே வைக்க வல்லவனாய், பகைவராலும் செய்யப்பட்ட வசை மொழிகளை அறிந்து, அவை பயிலாத தூய, இனிய சொற்களால் கவி இயற்றும் நாவன்மையும் நல்ல நூலறிவும் மிக்கவனாகிய இயற் தமிழ்ப் புலவன்.

இசைக் கருவிகளில் வல்லவனான தண்ணுமை முதல்வன்.

இசையோன் பாடிய நிலையை உணர்ந்து பண்ணிலக்கணம் பதினொன்றையும் பொருந்த வைத்து, முதல் நடை, வாரம், கூடை, திரள் என்ற நான்கு நலித்தும் கேடில்லாமல் இளைத்து வளர்ந்து, பாடலினிடத்துள்ள எழுத்துக்களைத் தெளிவாய் பிறருக்குப் புலப்படும் படி எழுத்தெழுத்தாக இயக்கி, குறைவுபடாமல் இசைக்கும் குழலோன்.

இந்த அரங்கில்தான் மாதவிப் பொன்மயிலாள் அரங்கேறினாள்.

இளங்கோ சொன்ன இயற் தமிழ்ப் புலவன் இன்று காணாமல் போய்விட்டார். இன்று பதங்களை, முத்திரைகளை, தாளத்தை, பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்து ஆடும் வழக்கம் கனடாவில் வந்து விட்டது.
தமிழ்த் தெரியாத பிள்ளைக்கு ஆடல் சொல்லிக் கொடுக்க முடியாது, முதலில் பிள்ளைக்குத் தமிழ் கற்றுக் கொடுங்கள் அதன்பின் ஆடல் பழகலாம் என்று சொல்லக் கூடிய நட்டுவனார்கள் இன்று இருக்கிறார்களா? இசை ஆசிரியர் இரண்டொருவர் இருக்கிறார்கள்.

பரதம் பொழுது போக்குக் கலையல்ல. அது வேதத்தின் ஒரு அங்கம், தெய்வீகக் கலை என்று அரங்கில் சொல்லப்பட்டது. ஆனால் ஆடல் கலை நட்டுவனார்களுக்கு வருவாய் தரும் கலையாகவும் ஆடல் மகளிருக்கு ஒரு மேலதிக பட்டம் தரும் கலையாகவும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

யாழினி ஆடிக்காட்டிய நடனங்களில் மெய்ப்பாடு (நவரசம்) மிகவும் நேர்ந்தியாக இருந்தது. அதனை ஏன் தமிழில் பாடவில்லை என்பது தெரியவில்லை.

உடலின் அசைவுகளால் நடனத்தில் அடைவுகள் தோன்றுகின்றது. அதே போல் முகத்தின் சதைகளின் அசைவினால் வேறுபாடான முகபாவங்கள் தோன்றுகின்றன. இந்த முகபாவங்களில் கண்களின் பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வகையான முகபாவங்களை தொல்காப்பியர் எண்பாண் சுவை என்பார். எட்டு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற இந்த மெய்ப்பாடுகள் ஆவன,

நகை – சிரிப்பு
அழுகை – அவலம்
இழிவரல் - இழிவு
மருட்கை - வியப்பு
அச்சம் - பயம்
பெருமிதம் - வீரம்
வெகுளி - சினம்
உவகை - மகிழ்ச்சி

இவற்றோடு யோக நிலையையும் சேர்த்து வடநூலோர் நவரசம் என வழங்குவர். சிரித்த முகபாவம், கர்வமான பார்வை, கூரான பார்வை, இடது அல்லது வலது அரங்கத்தைப் பார்த்தல் ஆகியவை முக்கியமாகும்.

இந்த மெய்யின் புறப்பாடுகளை முகத்தில் கொண்டுவர தமிழிமொழி அறிவு கட்டாயமாகும். அவற்றை ஆங்கிலத்தில் படித்து விளங்கிக் கொண்டு முகபாவம் காட்டுவது பிடரியைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றது.

திரு. இராசகுலசிங்கம் வரவேற்புரை ஆற்றினார். கொஞ்சமும் மேடைக் கூச்சம் இன்றி பல நாள் மேடையில் பேசிப் பழகிய அரசியல்வாதி போல் பேசினார். தனது அம்மம்மாவை நன்றியோடு நினைவு கூர்ந்தார். அதுபோல் தான் படித்த இந்துக் கல்லூரி, தன்னை ஆளாக்கிய ஆசிரியர்கள், கைப்பிடித்த துணைவி மணிமேகலை ஊக்குவித்த உடன்பிறப்புக்கள் எல்லோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அரங்கில் ஆடல் அழகிக்கு அடுத்ததாக அவையோர் மனங்களைக் கொள்ளை கொண்டவர் பெங்களுர் மிருதங்க ஆசான் எஸ்.வி. பாலகிருஷ்ணா. மிருதங்கத்துக்குள் இத்தனை இசைநுணுக்கங்கள் இருக்கின்ற சங்கதி அன்றுதான் எனக்குத் தெரிந்தது. மாதவியின் அரங்கேற்றத்தில் தோற்கருவியை வாசித்த தண்ணுமை முதல்வனை மனக் கண்ணில் கொண்டு வந்தது போல மிக நேர்த்தியாக வாசித்தார்.

அடுத்து வயலின் வாசித்த திருமதி கல்யாணி சுதர்சன் மனதைத் தொட்டார். அவரது வாசிப்பில் பட்டறிவின் முத்திரையைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.
யாழினியின் அணிமணி அலங்காரம் (நாடக ஆபரணம், நிருத்ய ஆபரணம்) ஒப்பனை அலங்காரம், தலை அலங்காரம், உடை அலங்காரம் மிக மிக நேர்த்தியாக இருந்தன. நட்டுவனார் இந்தத் துறையில் மிக்க கவனம் செலுத்தியது தெரிந்தது.

பரதமும் இசையும் ஒன்றிணைந்த கலைப் பரம்பரையில் வந்த கலைமாமணி யாதவன் வழக்கம் போல் நன்றாகவே பாடினார். குறிப்பாக பின்னணி இசை இல்லாது பாடும்போது பாடல் வரிகள் தெளிவாக காதில் விழுந்தது. ஆனால் முதல் நாள் இரவு நெடு நேரம் கண் விழித்து ஒத்திகை பார்த்ததோ என்னவோ தூக்கக் கலக்கத்தில் இருந்தவர் போல் காணப்பட்டார்.

எல்லோருக்கும் மேலாக நடன அரங்கேற்றின் பாராட்டுக்குரியவர் நட்டுவனார் நிரஞ்சனா சந்துரு ஆவார். அரங்கில் கொஞ்சம் சிரித்த முகத்தோடு காணப்பட்டால் கண்ணுக்குக் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும்.

சிறப்பு விருந்தினரது பெயரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட பலரும் சரியாக உச்சரிக்க முடியாது வில்லங்கப்பட்டார்கள். ஆங்கிலத்தில் எழுதியவாறே திருமாவலவன் என உச்சரித்தார்கள். இது சின்னத் தவறுதான் என்றாலும் அதனை தவிர்த்திருக்கலாம்.

முதன்மை விருந்தினர் இசை ஆசான் பொன். சுந்தரலிங்கம் பேசும் போது யாழியின் ஆடல் தமிழீழத்திலும் அரங்கேற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் மேடையில் வைத்தே யாழினி வழக்கறிஞருக்கு படிக்க இருக்கிறார் என்ற செய்தி சொல்லப்பட்டதே?

எப்போதும் தமிழில் பேசிவிட்டு ஆங்கிலத்திலும் பேசுவதை வழக்கமாகக் கொண்ட அடிகளார் யோசேப் சந்திரகாந்தன் இரு மொழிகளிலும் வாழ்த்துரை வழங்கினார். வழக்கம் போல் கூற வேண்டியதை இரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு இறங்கிவிட்டார். வந்திருந்தவர்கள் தமிழர், கேட்போர் தமிழர் பின் ஆங்கிலத்துக்கு என்ன அவசியம்? தமிழ் தெரியாத தமிழர்களுக்கு ஆங்கிலம் என்றால் அவர்கள் தமிழ் படிக்காமல் இருந்துவிட அது நல்ல வாய்ப்பாகிவிடாதா?

சிறப்பு விருந்தினர் தொல். திருமாவளவன் முதலில் கலை பற்றிப் பேசினார். தான் கலந்து கொள்ளும் முதல் நடன அரங்கேற்றம் யாழினியுடைய அரங்கேற்றம் என்று சொன்னபோது மிகவும் வியப்பாக இருந்தது. கனடாவில் அவர் சில காலம் இருக்க நேர்ந்தால் ஒவ்வொரு கிழமையும் நடன அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கலாம். அரசியல் பேசும்போது தேர்தல் கூட்டணி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு மட்டும் செய்யப்படுவது, விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவோடு அணி சேர்ந்தாலும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காது, தமிழீழ விடுதலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்றுமே பக்க பலமாக இருப்பார்கள் என்றார்.

தமிழீழ அரசவைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை இந்த அரங்கேற்றத்துக்கென்றே எழுதிய “உலகமே தீர்ப்பு எழுது” என்ற பாடலுக்கு கலைமாமணி யாதவன் இசை அமைத்துப் பாட யாழினி ஆடினது சிறப்பாக இருந்தது.

அரைத்த மாவையே அரையாமல் காலத்துக்கு ஏற்றவாறு “நாம் அழுத கண்ணீர்” என்ற எழுச்சிப் பாடலுக்கு யாழினி ஆடியது பொருத்தமாக இருந்தது.

நன்றியுரையை அன்றைய ஆடல்நாயகி யாழினியே செய்தார். அவரது வாயில் இருந்து ஒரு தமிழ்ச் சொல்லேனும் வராதது மனதுக்கு வலியாக இருந்தது.
அம்மா அப்பா என்ற அழகு தமிழ்ச் சொற்கள் கூட அவர் வாயில் வர மாட்டேன் என்று விட்டது. தமிழில் வணக்கம் நன்றி என்ற இரண்டு சொற்களையேனும் அவருக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையா?
இந்தச் சொற்கள் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கே கைவந்த கலைச் சொற்களாச்சே? உலகில் சிறந்தது நாட்டியக் கலையே! ஆடல் அழகி யாழினியின் அரங்கேற்றம்!
திருமகள்
தை: தத்த தை, தாம்தை, தத்த தை, கிடதகதாம், தித் தாம,; கிடதகதை, தத் தாம் தை,
தாகத ஜம்தரி தா, ததகத ஜம்தரி தை,
ததிகின தோம்-தக ததிகின தோம்-தக திகுததி கிணதோம்
தாம், , தை, தத்த தாம், ,
திகிதக திகிதக திகிதக திகிதக திகிதக திகிதக
திகிதக திகிதக திகிதக திகிதக தளாங்கு தகதிது தோம்
என்ன பார்க்கிறீர்கள்? திருமகள் சில காலம் கழித்து அரங்கேற்றம் பார்த்தது போல் தெரிகிறதா?
நீங்கள் நினைப்பது சரி. கிழமை இறுதியில் செல்வி யாழினியின் அரங்கேற்றம் பார்த்தேன். சுவைத்தேன், களித்தேன், மலைத்தேன், திளைத்தேன் அதுபற்றி எழுதலாம் என நினைத்தேன்! மேலே தந்திருப்து யாழினி ஆடிய அலாரிப்பு சொற்கட்டு!
தமிழ் உணர்வாளர் திரு. இராசகுலசிங்கம் (பாபு) அவர்களின் திருமகள் யாழினியின் அரங்கேற்றம் தங்களுடைய வீட்டு அரங்கேற்றம் என நினைத்து நிகழ்ச்சி தொடங்கு முன்னரே 1,700 பேர் கொள்ளக் கூடிய கலைக்கான ரொறன்ரோ மைய அரங்கத்தை (வுழசழவெழ ஊநவெசந கழச யுசவள ) நிறைத்து விட்டார்கள்.
வழக்கமான பூசை, மங்கள விளக்கேற்றல், அமைதி வணக்கம் நடந்து முடிந்த பின்னர்நட்டுவனார் (நடன ஆசிரியை) தனது மாணவிக்கு இரு கால்களுக்கும் சலங்கை கட்டி விட்டார். இதனை சலங்கை பூசை என்று அழைப்பர். பூசை என்ற தனித்தமிழ் சொல்லை சமற்கிருத சொல் எனக் காட்டுமாறு அதனை பூஜை என வடமொழிப் பற்றாளர்கள் உச்சரிக்கிறார்கள்.
வெண்கலம் செம்ப மற்ற வெள்ளியும் மூன்றிலொன்றால்பங்கிய நஷ்ற்சுரங்கள் பலுகவே யழகாய்ச் செய்தகிண்கிணி தனக்குத் தாரா கணமதி தெய்வமாங்கருங்கயி றதனிற் கோத்திட உறுதியாய் முடிச்சைப் போடே…….
என்று மகபரத சூடாமணி என்கிற நூலில் கிண்கிணி என்கின்ற சலங்கையின் அழகுகள் சொல்லப்பட்டுள்ளது. வெண்கலம், செம்பு, வெள்ளி இம் மூன்றினுள் ஒன்றால் கிண்கிணி செய்யப்பட்டிருக்கும். வலது காலுக்கு நூறுசலங்கையும் இடது காலுக்கு இருநாறு சலங்கையும் கட்டி ஆடுதல் வேண்டும். ஆனால் நாகரிகம் மிகுந்து நேரம் அருமையாகி விட்ட இந்தக் காலத்தில் பாட்டில் சொன்னது போல் யாரும் கிண்கிணி கட்டி ஆடுவதில்லை.
நிகழ்ச்சிகளை சுதர்சன் துரையப்பா தொகுத்து வழங்கினார். சுதர்சன் அரங்கேறிய நர்த்தகர். அதனால் நடனம் பற்றிய தரவுகளை சாங்கோ பாங்கமாக அவ்வப்போது எடுத்து விளக்கினார். ஆனால் அதனை பெரும்பாலும் ஆங்கிலத்தில் சொன்னதுதான் சோகம். நடனம் எங்கள் மண்ணில் விளைந்த ஒரு கலை என்பது உண்மையானால் அந்த மண்ணிற்குச் சொந்தமான தமிழில்தானே அதனை விளக்க வேண்டும்?
இப்போதெல்லாம் நட்டுவனார்கள் நடனத்தையே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள். காரணம் நடனம் கற்கும் மாணவர்களுக்கு தமிழ் தெரியாது!
நிகழ்ச்சி தோடய மங்களத்தோடு தொடங்கியது. ஆடல்மகள் உள்ளே இருந்து வெளியே வருவதற்கு முன்னாள் பாடகரும் பக்கவாத்தியக்காரர்களும் சரியாகச் சேர்ந்து இசைவதற்கும் மங்களத்திற்காகவும் பாடுவதாகும், இதனை மேளம் கட்டுவது என்றும் சொல்வர். இந்த நிகழ்ச்சியை நட்டுவனார் ஒரு மணி நேரம் செய்வார். ஆனால் அது இப்போது அய்ந்து மணித்துளியோடு முடிந்து விடுகிறது,
அடுத்து மலர்வணக்கம் (புஷ்பாஞ்சலி) தொடங்கியது. கைகளில் மலரை ஏந்திக் கொண்டு கடினமான கால்களில் அடைவுகளை (கழழவ ளவநிள) காட்டி அரங்கம் முழுதும் சுற்றி வந்து செய்கும் நடனமாகும். அடவு என்ற சொல் ஆடல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது.
அடுத்து அலாரிப்பு. அலாரிப்பு இல்லாத நடன நிகழ்ச்சியை இன்று பார்க்க முடியாது. அலாரிப்பு என்றால் தயார்படுத்திக் கொள்ளல் என்பதே பொருள். அதனை ஆங்கிலத்தில் றயசஅiபெ-ரி என்று திரு. சதர்சன் மொழிபெயர்;துச் சொன்னார். அலாரிப்பு ஜதியிiனை சொற்கட்டு என்று சொல்வார்கள்.
இந்த இடத்தில் ஒரு ஆடல் மகளுக்கு இருக்க வேண்டிய அழகுகளைச் சற்றுப் பார்க்கலாம்.
மன்னர் முதல் மூன்று குலத்தில் உதித்த சிவந்த நிறமும் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஒளிமுகத்தை உடையவளாகவும் அன்னம் போன்றவளாகவும் அரச கட்டிலின் முன்னே பத்து முழம் விட்டு கீழ்த்திசையில், திரையை நீக்கி, முழுநிலவு போலவும் பூத்த வஞ்சிக்கொடி போலவும் கார்மேகம் திறந்து மின்னல் வெளிப்பட்டது போலவும் விளங்கத் தோன்றுவாள். மிகப்பருத்தல், மிக இளைத்தல், மிக உயரம், மிக குறுகல் இல்லாத உடலும் தக்க வடிவமும் சிறந்த மார்பகங்களுடன் அறிவு உரம் பெற்றவளாயும் தாள சுரஅறிவு, பரந்த நெற்றி, உடல் அமைப்பு, முக மலர்ச்சி இவற்றை உடையவளாய் இருந்தல் வேண்டும். (அபிநய தர்ப்பணம்)
பண்டைய காலத்தில் இருந்து தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும் 64 கலைகளில் ஒன்றான ஆடல்கலையே இன்று பரதம் என அழைக்கப்படுகிறது. பாவம், இராகம், தாளம் என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து “பரதம்” ஆகியது என்று சொல்கிறார்கள். தமிழ் இலக்கியங்களில் இதனை கூத்து, ஆடல், நடம், நர்த்தனம், நிருத்தம் என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இதனை சதிர் என்றும் சின்னமேளம் என்றும் அழைத்தார்கள். அண்மைக்காலமாகவே இந்த நாட்டியம் “பரத நாட்டியம்” எனக் குறிக்கப்பட்டு உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்த மூன்று சொற்களும் நாட்டியத்தின் முக்கிய கூறுகளாகும்.
இந்த நடனத்தை சிவபெருமான் பிரமனுக்கு கற்பித்தார் என்றும், பிரமன் பரதமாமுனிவருக்கு (தண்டு முனிவர்) கற்பித்தார் என்றும், பரதர் அதனை கந்தருவர் அப்சரஸ் முதலிய விண்ணுலக வாசிகளுக்கு கற்பித்தார் என்று கூறப்படுகிறது. சிவபெருமானுக்கே உரித்தான தாண்டவ நடனத்தை சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்க நந்திகேசுவரருக்குக் கற்பித்தார். இவை யாவும் பின்னால் நடனக் கலைக்கு ஒரு தெய்வீகத்தைக் (ஆகமத்தை அருளியவர் சிவபெருமான் என்பது போல) கற்பிக்க நினைத்தவர்களது கற்பனையாகும். பரதக் கலை யாருக்குச் சொந்தம், தமிழருக்கா வடமொழியாளருக்கா? என்ற சிக்கலுக்குள் நான் நுழைய விரும்பவில்லை. அதற்குத் தோதான இடமும் இது இல்லை. ஆனால் ஆடல்மகளிரது உடையை வைத்தே இது யாருடைய கலை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்!
தமிழ்நாட்டில் பரதம் தஞ்சை, திருவாருர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் வளர்ந்து பரவியது. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 11 ஆம் நூற்றாண்டுவரை தேவடியார் (தேவதாசிகள்) எனப்படும் பெண்கள் கோயில்களில் நடனமாடினார்கள். இராசராசன் காலத்தில் ஏராளமான பெண்கள் கோயில்களில் நடனம் ஆடுவதற்கு அமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. இவர்கள் ஆடல், பாடல், இசைக்கருவிகள் முதலியவற்றை முறைப்படி கற்றுத் தேறியவர்கள். குமுதாயத்தில் அவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் திருவாரூர் திருக்கோயிலில் இருந்த உருத்திரக்கணிகையர் குலத்தைச் சேர்ந்த பரவைநாயகியை கண்டு காதலித்து மணந்தார் எனத் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) கூறுகிறது.
பரத நாட்டியத்தில் மட்டுமே கர்நாடக இசையில் உள்ள 35 தாளங்களும் 108 வகையான தாளங்களும் நாட்டிய உருப்படிகளும் உள்ளன.
ஆடல்மகளிருக்கு இயற் தமிழிலும், இசைத் தமிழிலும் ஓரளவு அறிவு இருத்தல் வேண்டும். மொழித் தேர்ச்சி இல்லாவிட்டால் மெய்ப்பாடுகளை சரிவர வெளிக்காட்ட முடியாது.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதையில் ஆடலும் பாடலும் அழகும் இம்மூன்றின் ஒன்று குறைபடாமல் ஏழ் ஆண்டு இயற்றி, பன்னிரண்டாம் அகவையில் மன்னன் முன்னிலையில் மாதவி அரங்கேறினாள். அப்போது மேடையில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.

இருவகைக் கூத்தின் (அகக் கூத்து, புறக் கூத்து) இலக்கணம் அறிந்த ஆடல் ஆசான்.

யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை, ஆடலோடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் பாடக்கூடிய இசை ஆசிரியன்.

இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறிய தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி, வேத்து இயல் பொது இயல் என்று இரு திறத்தின் நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்து, இசைப் புலவன்.

ஆளத்தி வைத்த பண்ணின் தன்மையை முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையைறையும் நீர்மையும் என்னம் பதினோரு கூறுகளையும் அறிந்து, இசையோன்.

தாள நிலையில் எய்த வைத்து ஓசை தன் கவியிடத்தே வைக்க வல்லவனாய், பகைவராலும் செய்யப்பட்ட வசை மொழிகளை அறிந்து, அவை பயிலாத தூய, இனிய சொற்களால் கவி இயற்றும் நாவன்மையும் நல்ல நூலறிவும் மிக்கவனாகிய இயற் தமிழ்ப் புலவன்.

இசைக் கருவிகளில் வல்லவனான தண்ணுமை முதல்வன்.

இசையோன் பாடிய நிலையை உணர்ந்து பண்ணிலக்கணம் பதினொன்றையும் பொருந்த வைத்து, முதல,; நடை, வாரம், கூடை, திரள் என்ற நான்கு நலித்தும் கேடில்லாமல் இளைத்து வளர்ந்து, பாடலினிடத்துள்ள எழுத்துக்களைத் தெளிவாய் பிறருக்குப் புலப்படும் படி எழுத்தெழுத்தாக இயக்கி, குறைவுபடாமல் இசைக்கும் குழலோன்.

இந்த அரங்கில்தான்; மாதவிப் பொன்மயிலாள் அரங்கேறினாள்.
இளங்கோ சொன்ன இயற் தமிழ்ப் புலவன் இன்று காணாமல் போய்விட்டார். இன்று பதங்களை, முத்திரைகளை, தாளத்தை, பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்து ஆடும் வழக்கம் கனடாவில் வந்து விட்டது.

தமிழ்த் தெரியாத பிள்ளைக்கு ஆடல் சொல்லிக் கொடுக்க முடியாது, முதலில் பிள்ளைக்குத் தமிழ் கற்றுக் கொடுங்கள் அதன்பின் ஆடல் பழகலாம் என்று சொல்லக் கூடிய நட்டுவனார்கள் இன்று இருக்கிறார்களா? இசை ஆசிரியர் இரண்டொருவர் இருக்கிறார்கள்.

பரதம் பொழுது போக்குக் கலையல்ல. அது வேதத்தின் ஒரு அங்கம், தெய்வீகக் கலை என்று அரங்கில் சொல்லப்பட்டது. ஆனால் ஆடல் கலை நட்டுவனார்களுக்கு வருவாய் தரும் கலையாகவும் ஆடல் மகளிருக்கு ஒரு மேலதிக பட்டம் தரும் கலையாகவும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

யாழினி ஆடிக்காட்டிய நடனங்களில் மெய்ப்பாடு (நவரசம்) மிகவும் நேர்ந்தியாக இருந்தது. அதனை ஏன் தமிழில் பாடவில்லை என்பது தெரியவில்லை.

உடலின் அசைவுகளால் நடனத்தில் அடைவுகள் தோன்றுகின்றது. அதே போல் முகத்தின் சதைகளின் அசைவினால் வேறுபாடான முகபாவங்கள் தோன்றுகின்றன. இந்த முகபாவங்களில் கண்களின் பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வகையான முகபாவங்களை தொல்காப்பியர் எண்பாண் சுவை என்பார். எட்டு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற இந்த மெய்ப்பாடுகள் ஆவன,

நகை – சிரிப்பு
அழுகை – அவலம்
இழிவரல் - இழிவு
மருட்கை - வியப்பு
அச்சம் - பயம்
பெருமிதம் - வீரம்
வெகுளி - சினம்
உவகை - மகிழ்ச்சி

இவற்றோடு யோகநிலையையும் சேர்த்து வடநூலோர் நவரசம் என வழங்குவர்.

சிரித்த முகபாவம், கர்வமான பார்வை, கூரான பார்வை, இடது அல்லது வலது அரங்கத்தைப் பார்த்தல் ஆகியவை முக்கியமாகும்.
இந்த மெய்யின் புறப்பாடுகளை முகத்தில் கொண்டுவர தமிழிமொழி அறிவு கட்டாயமாகும். அவற்றை ஆங்கிலத்தில் படித்து விளங்கிக் கொண்டு முகபாவம் காட்டுவது பிடரியைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றது. திரு. இராசகுலசிங்கம் வரவேற்புரை ஆற்றி;னார். கொஞ்சமும் மேடைக் கூச்சம் இன்றி பல நாள் மேடையில் பேசிப் பழகிய அரசியல்வாதி போல் பேசினார். தனது அம்மம்மாவை நன்றியோடு நினைவு கூர்ந்தார். அதுபோல் தான் படித்த இந்துக் கல்லூரி, தன்னை ஆளாக்கிய ஆசிரியர்கள், கைப்பிடித்த துணைவி மணிமேகலை ஊக்குவித்த உடன்பிறப்புக்கள் எல்லோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அரங்கில் ஆடல் அழகிக்கு அடுத்ததாக அவையோர் மனங்களைக் கொள்ளை கொண்டவர் பெங்களுர் மிருதங்க ஆசான் எஸ்.வி. பாலகிருஷ்ணா.

மிருதங்கத்துக்குள் இத்தனை இசைநுணுக்கங்கள் இருக்கின்ற சங்கதி அன்றுதான் எனக்குத் தெரிந்தது. மாதவியின் அரங்கேற்றத்தில் தோற்கருவியை வாசித்த தண்ணுமை முதல்வனை மனக் கண்ணில் கொண்டு வந்தது போல மிக நேர்த்தியாக வாசித்தார்.

அடுத்து வயலின் வாசித்த திருமதி கல்யாணி சுதர்சன் மனதைத் தொட்டார். அவரது வாசிப்பில் பட்டறிவின் முத்திரையைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.

யாழினியின் அணிமணி அலங்காரம் (நாடக ஆபரணம், நிருத்ய ஆபரணம்) ஒப்பனை அலங்காரம், தலை அலங்காரம், உடை அலங்காரம் மிக மிக நேர்த்தியாக இருந்தன. நட்டுவனார் இந்தத் துறையில் மிக்க கவனம் செலுத்தியது தெரிந்தது.

பரதமும் இசையும் ஒன்றிணைந்த கலைப் பரம்பரையில் வந்த கலைமாமணி யாதவன் வழக்கம் போல் நன்றாகவே பாடினார். குறிப்பாக பின்னணி இசை இல்லாது பாடும்போது பாடல் வரிகள் தெளிவாக காதில் விழுந்தது. ஆனால் முதல் நாள் இரவு நெடு நேரம் கண் விழித்து ஒத்திகை பார்த்ததோ எஎன்னவோ தூக்கக் கலக்கத்தில் இருந்தவர் போல் காணப்பட்டார்.
எல்லோருக்கும் மேலாக நடன அரங்கேற்றின் பாராட்டுக்குரியவர் நட்டுவனார் நிரஞ்சனா சந்துரு ஆவார். அரங்கில் கொஞ்சம் சிரித்த முகத்தோடு காணப்பட்டால் கண்ணுக்குக் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும்.
சிறப்பு விருந்தினரது பெயரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட பலரும் சரியாக உச்சரிக்க முடியாது வில்லங்கப்பட்டார்கள். ஆங்கிலத்தில் எழுதியவாறே திருமாவலவன் என உச்சரித்தார்கள். இது சின்னத் தவறுதான் என்றாலும் அதனை தவிர்த்திருக்கலாம்.

முதன்மை விருந்தினர் இசை ஆசான் பொன். சுந்தரலிங்கம் பேசும் போது யாழியின் ஆடல் தமிழீழத்திலும் அரங்கேற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் மேடையில் வைத்தே யாழினி வழக்கறிஞருக்கு படிக்க இருக்கிறார் என்ற செய்தி சொல்லப்பட்டதே?
எப்போதும் தமிழில் பேசிவிட்டு ஆங்கிலத்திலும் பேசுவதை வழக்கமாகக் கொண்ட அடிகளார் யோசேப் சந்திரகாந்தன் இரு மொழிகளிலும் வாழ்த்துரை வழங்கினார். வழக்கம் போல் கூற வேண்டியதை இரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு இறங்கிவிட்டார். வந்திருந்தவர்கள் தமிழர், கேட்போர் தமிழர் பின் ஆங்கிலத்துக்கு என்ன அவசியம்? தமிழ் தெரியாத தமிழர்களுக்கு ஆங்கிலம் என்றால் அவர்கள் தமிழ் படிக்காமல் இருந்துவிட அது நல்ல வாய்ப்பாகிவிடாதா?

சிறப்பு விருந்தினர் தொல். திருமாவளவன் முதலில் கலை பற்றிப் பேசினார். தான் கலந்து கொள்ளும் முதல் நடன அரங்கேற்றம் யாழினியுடைய அரங்கேற்றம் என்று சொன்னபோது மிகவும் வியப்பாக இருந்தது. கனடாவில் அவர் சில காலம் இருக்க நேர்ந்தால் ஒவ்வொரு கிழமையும் நடன அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கலாம்.

அரசியல் பேசும்போது தேர்தல் கூட்டணி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு மட்டும் செய்யப்படுவது, விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவோடு அணி சேர்ந்தாலும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காது, தமிழீழ விடுதலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்றுமே பக்க பலமாக இருக்கும் என்றார்.

தமிழீழ அரசவைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை இந்த அரங்கேற்றத்துக்கென்றே எழுதிய “உலகமே தீர்ப்பு எழுது” என்ற பாடலுக்கு கலைமாமணி யாதவன் இசை அமைத்துப் பாட யாழினி ஆடினது சிறப்பாக இருந்தது.

அரைத்த மாவையே அரையாமல் காலத்துக்கு ஏற்றவாறு “நாம் அழுத கண்ணீர்” என்ற எழுச்சிப் பாடலுக்கு யாழினி ஆடியது பொருத்தமாக இருந்தது.

நன்றியுரையை அன்றைய ஆடல்நாயகி யாழினியே செய்தார். அவரது வாயில் இருந்து ஒரு தமிழ்ச் சொல்லேனும் வராதது மனதுக்கு வலியாக இருந்தது.

அம்மா அப்பா என்ற அழகு தமிழ்ச் சொற்கள் கூட அவர் வாயில் வர மாட்டேன் என்று விட்டது.

தமிழில் வணக்கம் நன்றி என்ற இரண்டு சொற்களையேனும் அவருக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையா? இந்தச் சொற்கள் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கே கைவந்த கலைச் சொற்களாச்சே?

கலைக்கான ரொறன்ரோ மையம் (Toronto Centre for Performance Arts) வழங்கிய ஒலி ஒளி மெச்சத்தக்கதாக இருந்தது.

Tuesday, August 01, 2006

சிறுதாவூரை வளைத்து உலையில் போட்ட ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா

சிறுதாவூர் சிறிய ஊராக இருக்கலாம். ஆனால் அது தமிழக அரசியலில் “பெரிதாவூர்” ஆகப் பேசப்படுகிறது. சிறுதாவூர், சென்னை - மாமல்லபுரம் நெடுஞ்சாலையில் இருக்கிறது. இங்கே கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒரு பெரிய மாளிகை. இங்கேதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது உயிர்த் தோழி சசிகலா இருவரும் சென்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள். அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தல் விவசாயத் தொழிலாளர்களைக் குடி அமர்த்தும் திட்டத்தின் கீழ் 1967 செப்தெம்பர் 15 இல் சிறுதாவ+ரில் ஒரு குடும்பத்துக்கு இரண்டரை ஏக்கர் நிலமும், பத்து செண்டு மனையும் வழங்கப்பட்டது. அதே செப்தெம்பர் 30 ஆம் நாள் துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பயனாளிகளைத் தேர்வு செய்தது. அவர்களுள் தலித் அல்லாத ஏழைகளும் இடம் பெற்றிருந்தனர். இப்படி ஒதுக்கப்பட்ட இடம் மழைக்காலத்தில் வெள்ளம் நிரம்புகிற தாழ்வான பகுதி என்பதாலும் வேளாண்மைக்கு ஏற்றதாக இல்லாததாலும் அதிகமான விலை மதிப்பு இல்லாத நிலையில் சில ஆண்டுகளில் இந்த நிலங்களைப் பெற்ற குடியிருப்பாளர்கள் பலர் பிறருக்கு விற்று விட்டனர் எனக் கூறப்படுகிறது. அதன் பின் அந்த நிலம் பலருக்கு கைமாறியது. சுபஸ்ரீ, ஜாகிர் குசேன், காஜா மொகிதீன், சேயத் அப்பாஸ, இளையராசா எனக் கைமாறி இறுதியில் பரணி Cottage Resorts உரிமையாளர்கள் அதனை விலைக்கு வாங்கினார்கள். சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான இளவரசி, சித்திரா. சுதாகரன் ஆகியோரே இந்த பரணி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆவர்.இப்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் தலித்மக்கள் தங்கள் நிலம் பிறரால் பிடுங்கப்பட்டு விட்டதாகவும் அந்த நிலம் சசிகலாவுக்குச் சொந்தம் எனச் சொல்லி தாங்கள் பயமுறுத்தப்பட்டதாகவும் முறைப்பாடு செய்தனர். நிலத்தைச் சுற்றிப் பேடப்பட்ட கம்பி வேலிகளையும் தூண்களையும் தலித் மக்களில் சிலர் அகற்றிவிட்டனர். தலித்மக்கள் சார்பாக மார்க்சிஸ்ட் கட்சி சென்னையில் பேரணி ஒன்றை நடத்தி முதல்வர் கருணாநிதியிடம் தலித்துக்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சித் தலைவர் என். வரதராசன் தமிழக முதலுவர் கருணாநிதியை நேரில் சந்தித்து தலித் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தை சசிகலாவின் நெருங்கி உறவினர்கள் ஆன இளவரசி, சித்திரா, சுதாகரன் ஆகியோர் மோசடி செய்து வாங்கி இருப்பதற்கான ஆவணங்களைக் கையளித்தார். தலித் மக்களுக்கு 1967 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட நில அளவை எண்கள் ( Land survey numbedrs) சசிகலாவின நெருங்கிய உறவினர்கள் வாங்கிய நிலத்தின அளவை எண்களோடு ஒத்துப் போவதாக திரு. வரதராசன் தெரிவித்தார். எடுத்துக்காட்டாக நில அளவு எண் 378/2 தொடக்கத்தில் எழுமலை என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. அதே நிலம் பரணி ஊழவவயபந சுநளழசவள க்கு மாற்றப்பட்டது. .இதே போல் சின்னப்பன் என்பவரது நில அளவு எண் 374/2 அதே நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு மற்றவர்களது நிலங்களும் அவர்களது இசைவு இன்றி பரணி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்படி சட்டத்துக்கு முரணான நில மாற்றங்களை செய்ய மறுத்த தாசில்தார்கள் பணி மாற்றம் செய்யப்படடு அவர்களது இடத்துக்கு முதல்வரோடு ஒத்துப் போகக் கூடியவர்கள் அமர்த்தப்பட்டார்கள். எடுத்துக் காட்டாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தியாகராசன் 11 நாள்களுக்கு மட்டும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு நிலம் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வர் கருணாநிதி இந்தச் சிக்கல் குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு ஒய்வு பெற்ற நீதியரசர் ஒருவரை நியமித்துள்ளார். அறிக்கை கொடுக்க ஒரு மாத கால கெடு கொடுக்கப்பட்டுள்ளது. சிறுதாவூர் நிலச் சிக்கலை புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியும் கையில்; எடுத்து பறிபோன தலித் மக்களின் நிலத்தை மீட்டெடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களா, பஞ்சமி நிலத்தில்தான் வளைக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் வீசப்படுவதைப் பயன்படுத்தி அரசியலில் கொஞ்சக் காலம் காணாமல் போயிருந்த மருத்துவர் கிருஷ்ணசாமி வெளிச்சத்துக்கு மீண்டும் வர இதுதான் சாட்டு என்று சிறுதாவூருக்குள் நுழைந்துள்ளார்.

கடந்த யூலை 18 ஆம் நாளன்று சிறுதாவ+ருக்கு தீடீரென அதிரடியாகச் சென்ற கிருஷ்ணசாமி அந்த இடத்தைப் பார்வையிட்டார். ஜெயலலிதாவின் பங்களாவையொட்டி இருந்த இடத்தில் நுழைந்த கிருஷ்ணசாமி பங்களாவை நெருங்கிப் போய்ப் பார்த்தார். கூடவே சென்ற செய்தியாளர்களும் இதுதான் நல்ல வாய்ப்பு என்று இதுவரையில் நெருங்கமுடியாமல் இருந்த சிறுதாவ+ர் பங்களாவை படம் பிடித்துத் தள்ளினர்.

"சசிகலா பெயரைச் சொல்லித்தான் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அந்த நிலத்தைத் திரும்பப் பெறும்வரை ஓய மாட்டோம்” என அங்கிருந்தவர்கள் முழகக்கம் இட்டார்கள். இதைக் கேட்டுவிட்டு ‘நிலத்தை மீட்டெடுப்பதில் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் நீங்கள் உறுதியாக இருப்பீர்களா?” என்று கேட்டார் கிருஷ்ணசாமி "உயிரே போனாலும் நாங்கள் கடைசி வரையில் போராடுவோம்” என்றதும் மருத்துவர் கிருஷ்ணசாமி நெகிழ்ந்து போனார்.

அதிமுகவினர் “திமுகதான் தலித் அமைப்புக்களை தூண்டி விட்டுப் பின்னால் நின்று வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஜெயலலிதா தலித்துகளுக்கு எதிரானவர் என்ற படிமத்தை உருவாக்கி விரைவில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள் ……. அதற்காகத்தான் கிருஷ்ணசாமியைப் பயன்படுத்துகிறார்கள்” என்று பேசுகிறார்கள். தலித் மக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிறுத்தைகள் அமைப்புப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் சிறுதாவூர் சென்று குறிப்பிட்ட தலித் மக்களைச் சந்தித்து பேசியுள்ளார். அதன் பின் அவர் விட்ட அறிக்கையில் தலித் மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்றும் அந்த நிலத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இந்தச் சிக்கலை வைத்து ஜெயலலிதாவை அரசியல் பழிவாங்க திமுக அரசு முயற்சிப்பதாகவும் திருமாவளவன் குற்றச் சாட்டியுள்ளார். அதிமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மதிகவும் இந்தச் சிக்கல் தொடர்பாக களம் இறங்கியுள்ளது. சிறுதாவ+ர் நிலம் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு தொடர்பில்லை என மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து ஜெயா தொலைக்காட்சியில் அவர் அளித்த செவ்வியில் சிறுதாவ+ரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்குவதற்கு பயன்படுத்துகின்ற வீடு தலித் மக்களுக்கு 1967 ஆம் ஆண்டு அரசு ஒதுக்கிய நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது என்று முழுக்க முழுக்க பொய்யான முறைப்பாடு எழுப்பப்பட்டு உள்ளது. இந்தச் சிக்கல் குறித்து உண்மை நிலையை சிறுதாவ+ர் மக்களிடம் நேரில் விசாரித்து அறிய மறுமலர்ச்சி திமுக சார்பில் துணைப் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் ஒரு குழுவினர் சிறுதாவ+ர் சென்றனர்.ஊர் மக்கள் ஒட்டு மொத்தமாகச் சொன்ன செய்திகளில் இருந்தும், திரட்டப்பட்ட வருவாய்த்துறை ஆவணங்களில் இருந்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்குவதற்குப் பயன்படுத்தும் வீடு, சுற்று அடைப்புக்கு உள்பட்ட இடமும், தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் சிறிது அளவும் அமையவில்லை என்பது தெரிகிறது.இப்படி ஒதுக்கப்பட்ட இடம் மழைக்காலத்தில் வெள்ளம் நிரம்புகிற தாழ்வான பகுதி என்பதாலும் சாகுபடிக்கு ஏற்றதாக இல்லாததாலும் அதிகமான விலை மதிப்பு இல்லாத நிலையில் சில ஆண்டுகளில் இந்த நிலங்களை பிறருக்கு விற்று விட்டனர்.பலருக்கு நிலம் கை மாறிய நிலையில் 2005 இல் பரணி ஊழவவயபந சுநளழசவள உரிமையாளர்கள் விலைக்கு வாங்கி உள்ளனர். ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டவும், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லவும் திட்டமிட்டு, ஒரு கோரிக்கையை தரச் செய்து உயர்நீதீமன்ற முன்னாள் நீதிபதி விசாரணை ஆணையத்தை முதல்வர் அவசர அவசரமாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயமும், முரசொலி அலுவலகக் கட்டடமும் தலித்களின் நிலங்களை ஆக்கிரமித்துத் தான் கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது இது தொடர்பாகவும் விசாரணை நடத்த கருணாநிதி முன் வருவாரா?” என்றார் வைகோ.வைகோ ஒருவரைப் போற்ற நினைத்தால் அளவுகடந்து போற்றுவார். அவ்வாறே தூற்ற நினைத்தாலும் சூடான சொற்களைத் தேர்ந்தெடுத்து கடுமையாகத் தூற்றுவார். இது அவரது இயல்பு.பொடா சிறையில் இருந்த போதும் அதில் இருந்து வெளிவந்த பின்னரும் வைகோ ஜெயலலிதாவை சரிமாரியாக அருச்சித்தார். சூனியக்காரி, ஊர்ப்பிடாரி, பாசிஸ்ட் என்றெல்லாம் அருச்சனை செய்தார். அதிமுக வோடு கூட்டணி வைத்த பின்னர் அதே ஜெயலலிதாவை புரட்சித்தலைவி, யோன் ஒவ் ஆர்க், ஜான்சி இராணி என்றெல்லாம் உச்சிமேல் வைத்துப் போற்றுகிறார். தேர்தலின் போது வைகோ “புரட்சித் தலைவியின் ஆட்சி பொற்கால ஆட்சி” என்று புகழ்மாலை சூட்டிpய போது எல்லோரும் வியப்பால் வாயடைத்துப் போனார்கள்.திமுக சார்பாக 18 ஆண்டு காலம் மேல்சபை உறுப்பினராக இருந்த வைகோவிற்கு “அண்ணா அறிவாலயமும், முரசொலி அலுவலகக் கட்டடமும் தலித்களின் நிலங்களை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது” என்ற உண்மை பொய் எப்படித் தெரியாமல் போனது என்பது விளங்கவில்லை. வேறு கட்சிக்காரன் கேட்கலாம். வைகோ எப்படிக் கேட்கலாம்? சிறுதாவூர் பங்களாவின் சொந்தக்காரர் யார்? அதற்கும் ஜெயலலிதா – சசிகலா இருவருக்கும் என்ன தொடர்ப்பு? என்று முதலவர் கருணாநிதி கேட்டார். “சிறுதாவூர் பங்களா எனக்கோ சசிகலாவுக்கோ சொந்தமில்லை. அதில் வாடகைக்குத்தான் இருக்கிறோம்” என ஜெயலலிதா பதில் இறுத்தார். உண்மை என்னவென்றால் சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள்தான் பல கோடி பெறுமதியான அந்த நிலத்துக்கும் பங்களாவிற்கும் சொந்தக்காரர்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சிறுதாவூர் பங்களா இருந்த இடம் வந்ததும் பேருந்து நடத்தினர் “அம்மா இடம் வந்தாச்ச இறங்குங்கோ” என்று குரல் கொடுப்பாராம். அப்படிக் குரல் கொடுக்க மறந்த அல்லது மறுத்த நடத்துனர்கள் பணி மாற்றப்பட்டார்கள்!ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சென்னை – மாமல்லபுரம் நெடுஞ்சாலை பல கோடி செலவழித்து செப்பனிடப்பட்டது. அதற்கு இந்தப் பங்களாதான் காரணியாகும்.இப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேலும் ஒரு தலையிடி வந்துள்ளது.

பிறந்த நாளை ஒட்டி இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு பரிசுகள் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சி.பிஅய். சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
உடந்தையாக இருந்ததாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகையை சி.பி.அய.; தாக்கல் செய்துள்ளது.

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த 1990 – 96 ஆம் ஆண்டுகளில் முதல்வராக பதவி வகுத்தார். 1992 ஆம் ஆண்டில் அவரது பிறந்த நாளையொட்டி ஏராளமான பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டன. வெளிநாட்டில் இருந்து 89 டிடிக்கள் வந்தன. அவற்றின் மதிப்பு ரூ 2 கோடி 12 உரூபா ஆகும். இந்த 89 டி.டி.,க்களும் 57 பெயர்களில் அனுப்பப்பட்டு இருந்தன. இவை சென்னை கனரா வங்கியில் ஜெயலலிதா பெயரில் வரவு வைக்கப்பட்டது. அலுவல் ரீதியான பரிவர்த்தனை செய்துள்ள நபர்களிடம் இருந்து இந்த பரிசுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா பெற்றிருப்பதால் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவு 11ன் கீழ் அவர் குற்றம் புரிந்துள்ளார் என்று கருதப்பட்டது.
தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வருமான வரித் துறையின் இயக்கநர் (புலன் விசாரணை) பெயரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது பின்னர் மாநில அரசின் வேண்டுகோளின்படி இந்த வழக்கு விசாரணை சி.பி.அய்க்கு மாற்றப்பட்டது. சென்னையில் உள்ள சி.பி.அய்யின் ஊழல் தடுப்பு பிரிவின் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா விவகாரத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 13(1)(இ) பிரிவின் கீழ் தவறுகள் நடந்துள்ளதா என்பது குறித்து சி.பி.அய்யினர் விசாரணை நடத்தினர். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்த மூன்று லட்சம் டாலர் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டது. ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 11 இன் படி ஜெயலலிதா குற்றம் புரிந்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில்தான் சிபிஅய்க்கு அனுமதி அளித்தது.

அன்றைய காலகட்டத்தில் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் டிடி.க்கள் எடுக்க பணம் கொடுப்பதில் பின்னணியில் இருந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. டிடிக்களை ஜெயலலிதா ஏற்றுக் கொள்வதற்கு இவர்கள் இருவரும் முன்னாள் முதல்வர் ஜெயலிதா மீது வழக்குத் தொடர தமிழக சபாநாயகரின் அனுமதியை சி.பி.அய் கேட்டது. ஜெயலலிதா தற்போது எம்எல.ஏ வாக இருப்பதால் அவர் மீது சட்டப்ப+ர்வ நடவடிக்கை எடுக்க அவைத்தலைவரின் அனுமதி வெற வேண்டும். ஜெயலலிதா மீது சட்டப்ப+ர்வ நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி வழங்கியுள்ளார்.

நேற்று சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மீனாட்சி சுந்தரத்திடம் ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்தரிரிகையில் 149 சாட்சிகள் இடம் பெற்றுள்ளனர். 285 ஆவணங்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 2,000 பக்கங்கள் அடங்கியதாக குற்றப்பத்திரிகை உள்ளது. குற்றப்பத்திரிகையை சரிபார்த்து விட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உட்பட மூவருக்கும் ஆணை அனுப்பப்பட்டு குற்றப்பத்திரிகையின் படிகள் வழங்கப்படும்.

திராவிடர் இயக்கத்தின் மூலாதாரக் கொள்கைகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஜெயலலிதாவை எண்பதுகளில் அரசியலுக்குக் கொண்டு வந்ததன் மூலம் மறைந்த எம்ஜிஆர் திராவிட இயக்கத்திற்கு மிகப் பெரிய வரலாற்றுத் தவறைச் செய்தார்.
திராவிடர் இயக்கத்தின் சமூகநீதி இயக்கத்துடனோ - அல்லது சுயமரியாதை இயக்கத்துடனோ - அல்லது தமிழ் இயக்கத்துடனோ - ஒட்டோ உறவோ இல்லாத ஜெயலலிதா - திராவிடர் இயக்கம் எந்த மேல் வருணத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துத் துவக்கப்பட்டதோ, அந்த வருணத்தைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகை எம்.ஜி.ஆருடன் ஏற்படுத்திக் கொண்ட 'நெருக்கத்தை” வைத்தே அதிமுக வின் பொதுச் செயலாளராகி இரண்டு தடவை ஆட்சியும் நடத்திவிட்டார்!

நல்லகாலமாக சென்ற தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டு விட்டது. வி.புலிகளின் கடும் எதிர்ப்பாளரான ஜெயலலிதா தற்செயலாக வென்று வந்திருந்தால் தமிழ்த் தேசியத்துக்கு அது மிகப் பெரிய பின்னடைவாக இருந்திருக்கும்.