Wednesday, August 09, 2006

உலகில் சிறந்தது நாட்டியக் கலையே! ஆடல் அழகி யாழினியின் அரங்கேற்றம்!

திருமகள்

தை: தத்த தை, தாம்தை, தத்த தை, கிடதகதாம், தித் தாம்;

கிடதகதை, தத் தாம் தை,

தாகத ஜம்தரி தா, ததகத ஜம்தரி தை,

ததிகின தோம்-தக ததிகின தோம்-தக திகுததி கிணதோம்

தாம், , தை, தத்த தாம், ,

திகிதக திகிதக திகிதக திகிதக திகிதக திகிதக

திகிதக திகிதக திகிதக திகிதக தளாங்கு தகதிது தோம்

என்ன பார்க்கிறீர்கள்? திருமகள் சில காலம் கழித்து அரங்கேற்றம் பார்த்தது போல் தெரிகிறதா?

நீங்கள் நினைப்பது சரி. கிழமை இறுதியில் செல்வி யாழினியின் அரங்கேற்றம் பார்த்தேன். சுவைத்தேன், களித்தேன், மலைத்தேன், திளைத்தேன் அதுபற்றி எழுதலாம் என நினைத்தேன்! மேலே தந்திருப்து யாழினி ஆடிய அலாரிப்பு சொற்கட்டு!

தமிழ் உணர்வாளர் திரு. இராசகுலசிங்கம் (பாபு) அவர்களின் திருமகள் யாழினியின் அரங்கேற்றம் தங்களுடைய வீட்டு அரங்கேற்றம் என நினைத்து நிகழ்ச்சி தொடங்கு முன்னரே 1,700 பேர் கொள்ளக் கூடிய கலைக்கான ரொறன்ரோ மைய அரங்கத்தை நிறைத்து விட்டார்கள்.

வழக்கமான பூசை, மங்கள விளக்கேற்றல், அமைதி வணக்கம் நடந்து முடிந்த பின்னர் நட்டுவனார் (நடன ஆசிரியை) தனது மாணவிக்கு இரு கால்களுக்கும் சலங்கை கட்டி விட்டார். இதனை சலங்கை பூசை என்று அழைப்பர். பூசை என்ற தனித்தமிழ் சொல்லை சமற்கிருத சொல் எனக் காட்டுமாறு அதனை பூஜை என வடமொழிப் பற்றாளர்கள் உச்சரிக்கிறார்கள்.

வெண்கலம் செம்ப மற்ற வெள்ளியும்
மூன்றிலொன்றால்பங்கிய நஷ்ற்சுரங்கள் பலுகவே யழகாய்ச் செய்தகிண்கிணி தனக்குத் தாரா கணமதி தெய்வமாங்
கருங்கயி றதனிற் கோத்திட உறுதியாய் முடிச்சைப் போடே…….

என்று மகபரத சூடாமணி என்கிற நூலில் கிண்கிணி என்கின்ற சலங்கையின் அழகுகள் சொல்லப்பட்டுள்ளது. வெண்கலம், செம்பு, வெள்ளி இம் மூன்றினுள் ஒன்றால் கிண்கிணி செய்யப்பட்டிருக்கும். வலது காலுக்கு நூறுசலங்கையும் இடது காலுக்கு இருநாறு சலங்கையும் கட்டி ஆடுதல் வேண்டும். ஆனால் நாகரிகம் மிகுந்து நேரம் அருமையாகி விட்ட இந்தக் காலத்தில் பாட்டில் சொன்னது போல் யாரும் கிண்கிணி கட்டி ஆடுவதில்லை.

நிகழ்ச்சிகளை சுதர்சன் துரையப்பா தொகுத்து வழங்கினார். சுதர்சன் அரங்கேறிய நர்த்தகர். அதனால் நடனம் பற்றிய தரவுகளை சாங்கோ பாங்கமாக அவ்வப்போது எடுத்து விளக்கினார். ஆனால் அதனை பெரும்பாலும் ஆங்கிலத்தில் சொன்னதுதான் சோகம். நடனம் எங்கள் மண்ணில் விளைந்த ஒரு கலை என்பது உண்மையானால் அந்த மண்ணிற்குச் சொந்தமான தமிழில்தானே அதனை விளக்க வேண்டும்?

இப்போதெல்லாம் நட்டுவனார்கள் நடனத்தையே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள். காரணம் நடனம் கற்கும் மாணவர்களுக்கு தமிழ் தெரியாது!

நிகழ்ச்சி தோடய மங்களத்தோடு தொடங்கியது. இது ஆடல்மகள் உள்ளே இருந்து வெளியே வருவதற்கு முன்னாள் பாடகரும் பக்கவாத்தியக்காரர்களும் சரியாகச் சேர்ந்து இசைவதற்கும் மங்களத்திற்காகவும் பாடுவதாகும், இதனை மேளம் கட்டுவது என்றும் சொல்வர். இந்த நிகழ்ச்சியை நட்டுவனார் ஒரு மணி நேரம் செய்வார். ஆனால் அது இப்போது அய்ந்து மணித்துளியோடு முடிந்து விடுகிறது,

அடுத்து மலர்வணக்கம் (புஷ்பாஞ்சலி) தொடங்கியது. கைகளில் மலரை ஏந்திக் கொண்டு கடினமான கால்களில் அடைவுகளை (foot-steps) காட்டி அரங்கம் முழுதும் சுற்றி வந்து செய்கும் நடனமாகும். அடவு என்ற சொல் ஆடல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது.

அடுத்து அலாரிப்பு. அலாரிப்பு இல்லாத நடன நிகழ்ச்சியை இன்று பார்க்க முடியாது. அலாரிப்பு என்றால் தயார்படுத்திக் கொள்ளல் என்பதே பொருள். அதனை ஆங்கிலத்தில் warm-up என்று திரு. சதர்சன் மொழிபெயர்த்துச் சொன்னார். அலாரிப்பு ஜதியினை சொற்கட்டு என்று சொல்வார்கள்.

இந்த இடத்தில் ஒரு ஆடல் மகளுக்கு இருக்க வேண்டிய அழகுகளைச் சற்றுப் பார்க்கலாம்.

மன்னர் முதல் மூன்று குலத்தில் உதித்த சிவந்த நிறமும் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஒளிமுகத்தை உடையவளாகவும் அன்னம் போன்றவளாகவும் அரச கட்டிலின் முன்னே பத்து முழம் விட்டு கீழ்த்திசையில், திரையை நீக்கி, முழுநிலவு போலவும் பூத்த வஞ்சிக்கொடி போலவும் கார்மேகம் திறந்து மின்னல் வெளிப்பட்டது போலவும் விளங்கத் தோன்றுவாள். மிகப்பருத்தல், மிக இளைத்தல், மிக உயரம், மிக குறுகல் இல்லாத உடலும் தக்க வடிவமும் சிறந்த மார்பகங்களுடன் அறிவு உரம் பெற்றவளாயும் தாள சுரஅறிவு, பரந்த நெற்றி, உடல் அமைப்பு, முக மலர்ச்சி இவற்றை உடையவளாய் இருததல் வேண்டும். (அபிநய தர்ப்பணம்)

பண்டைய காலத்தில் இருந்து தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும் 64 கலைகளில் ஒன்றான ஆடல்கலையே இன்று பரதம் என அழைக்கப்படுகிறது.

பாவம், இராகம், தாளம் என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து “பரதம்” ஆகியது என்று சொல்கிறார்கள். தமிழ் இலக்கியங்களில் இதனை கூத்து, ஆடல், நடம், நர்த்தனம், நிருத்தம் என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இதனை சதிர் என்றும் சின்னமேளம் என்றும் அழைத்தார்கள்.
அண்மைக் காலமாகவே இந்த நாட்டியம் “பரத நாட்டியம்” எனக் குறிக்கப்பட்டு உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்த மூன்று சொற்களும் நாட்டியத்தின் முக்கிய கூறுகளாகும்.

இந்த நடனத்தை சிவபெருமான் பிரமனுக்கு கற்பித்தார் என்றும், பிரமன் பரதமாமுனிவருக்கு (தண்டு முனிவர்) கற்பித்தார் என்றும், பரதர் அதனை கந்தருவர் அப்சரஸ் முதலிய விண்ணுலக வாசிகளுக்கு கற்பித்தார் என்றும் கூறப்படுகிறது. சிவபெருமானுக்கே உரித்தான தாண்டவ நடனத்தை சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்க நந்திகேசுவரருக்குக் கற்பித்தார்.

இவை யாவும் பின்னால் நடனக் கலைக்கு ஒரு தெய்வீகத்தைக் (ஆகமத்தை அருளியவர் சிவபெருமான் என்பது போல) கற்பிக்க நினைத்தவர்களது கற்பனையாகும். பரதக் கலை யாருக்குச் சொந்தம், தமிழருக்கா வடமொழியாளருக்கா? என்ற சிக்கலுக்குள் நான் நுழைய விரும்பவில்லை. அதற்குத் தோதான இடமும் இது இல்லை. ஆனால் ஆடல்மகளிரது உடையை வைத்தே இது யாருடைய கலை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்!

தமிழ்நாட்டில் பரதம் தஞ்சை, திருவாருர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் வளர்ந்து பரவியது. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 11 ஆம் நூற்றாண்டுவரை தேவடியார் (தேவதாசிகள்) எனப்படும் பெண்கள் கோயில்களில் நடனமாடினார்கள். இராசராசன் காலத்தில் ஏராளமான பெண்கள் கோயில்களில் நடனம் ஆடுவதற்கு அமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. இவர்கள் ஆடல், பாடல், இசைக்கருவிகள் முதலியவற்றை முறைப்படி கற்றுத் தேறியவர்கள். குமுதாயத்தில் அவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது.

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் திருவாரூர் திருக்கோயிலில் இருந்த உருத்திரக்கணிகையர் குலத்தைச் சேர்ந்த பரவைநாயகியை கண்டு காதலித்து மணந்தார் எனத் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) கூறுகிறது.
பரத நாட்டியத்தில் மட்டுமே கர்நாடக இசையில் உள்ள 35 இராகங்களும் 108 வகையான தாளங்களும் நாட்டிய உருப்படிகளும் உள்ளன.

ஆடல்மகளிருக்கு இயற் தமிழிலும், இசைத் தமிழிலும் ஓரளவு அறிவு இருத்தல் வேண்டும். மொழித் தேர்ச்சி இல்லாவிட்டால் மெய்ப்பாடுகளை சரிவர வெளிக்காட்ட முடியாது.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதையில் ஆடலும் பாடலும் அழகும் இம்மூன்றின் ஒன்று குறைபடாமல் ஏழ் ஆண்டு இயற்றி, பன்னிரண்டாம் அகவையில் மன்னன் முன்னிலையில் மாதவி அரங்கேறினாள். அப்போது மேடையில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.

இருவகைக் கூத்தின் (அகக் கூத்து, புறக் கூத்து) இலக்கணம் அறிந்த ஆடல் ஆசான்.

யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை, ஆடலோடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் பாடக்கூடிய இசை ஆசிரியன்.
இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறிய தமிழ் முழுது அறிந்த தன்மையன்
ஆகி, வேத்து இயல் பொது இயல் என்று இரு திறத்தின் நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்து, இசைப் புலவன் ஆளத்தி வைத்த பண்ணின் தன்மையை முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையைறையும் நீர்மையும் என்னும் பதினோரு கூறுகளையும் அறிந்து, இசையோன் தாள நிலையில் எய்த வைத்து ஓசை தன் கவியிடத்தே வைக்க வல்லவனாய், பகைவராலும் செய்யப்பட்ட வசை மொழிகளை அறிந்து, அவை பயிலாத தூய, இனிய சொற்களால் கவி இயற்றும் நாவன்மையும் நல்ல நூலறிவும் மிக்கவனாகிய இயற் தமிழ்ப் புலவன்.

இசைக் கருவிகளில் வல்லவனான தண்ணுமை முதல்வன்.

இசையோன் பாடிய நிலையை உணர்ந்து பண்ணிலக்கணம் பதினொன்றையும் பொருந்த வைத்து, முதல் நடை, வாரம், கூடை, திரள் என்ற நான்கு நலித்தும் கேடில்லாமல் இளைத்து வளர்ந்து, பாடலினிடத்துள்ள எழுத்துக்களைத் தெளிவாய் பிறருக்குப் புலப்படும் படி எழுத்தெழுத்தாக இயக்கி, குறைவுபடாமல் இசைக்கும் குழலோன்.

இந்த அரங்கில்தான் மாதவிப் பொன்மயிலாள் அரங்கேறினாள்.

இளங்கோ சொன்ன இயற் தமிழ்ப் புலவன் இன்று காணாமல் போய்விட்டார். இன்று பதங்களை, முத்திரைகளை, தாளத்தை, பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்து ஆடும் வழக்கம் கனடாவில் வந்து விட்டது.
தமிழ்த் தெரியாத பிள்ளைக்கு ஆடல் சொல்லிக் கொடுக்க முடியாது, முதலில் பிள்ளைக்குத் தமிழ் கற்றுக் கொடுங்கள் அதன்பின் ஆடல் பழகலாம் என்று சொல்லக் கூடிய நட்டுவனார்கள் இன்று இருக்கிறார்களா? இசை ஆசிரியர் இரண்டொருவர் இருக்கிறார்கள்.

பரதம் பொழுது போக்குக் கலையல்ல. அது வேதத்தின் ஒரு அங்கம், தெய்வீகக் கலை என்று அரங்கில் சொல்லப்பட்டது. ஆனால் ஆடல் கலை நட்டுவனார்களுக்கு வருவாய் தரும் கலையாகவும் ஆடல் மகளிருக்கு ஒரு மேலதிக பட்டம் தரும் கலையாகவும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

யாழினி ஆடிக்காட்டிய நடனங்களில் மெய்ப்பாடு (நவரசம்) மிகவும் நேர்ந்தியாக இருந்தது. அதனை ஏன் தமிழில் பாடவில்லை என்பது தெரியவில்லை.

உடலின் அசைவுகளால் நடனத்தில் அடைவுகள் தோன்றுகின்றது. அதே போல் முகத்தின் சதைகளின் அசைவினால் வேறுபாடான முகபாவங்கள் தோன்றுகின்றன. இந்த முகபாவங்களில் கண்களின் பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வகையான முகபாவங்களை தொல்காப்பியர் எண்பாண் சுவை என்பார். எட்டு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற இந்த மெய்ப்பாடுகள் ஆவன,

நகை – சிரிப்பு
அழுகை – அவலம்
இழிவரல் - இழிவு
மருட்கை - வியப்பு
அச்சம் - பயம்
பெருமிதம் - வீரம்
வெகுளி - சினம்
உவகை - மகிழ்ச்சி

இவற்றோடு யோக நிலையையும் சேர்த்து வடநூலோர் நவரசம் என வழங்குவர். சிரித்த முகபாவம், கர்வமான பார்வை, கூரான பார்வை, இடது அல்லது வலது அரங்கத்தைப் பார்த்தல் ஆகியவை முக்கியமாகும்.

இந்த மெய்யின் புறப்பாடுகளை முகத்தில் கொண்டுவர தமிழிமொழி அறிவு கட்டாயமாகும். அவற்றை ஆங்கிலத்தில் படித்து விளங்கிக் கொண்டு முகபாவம் காட்டுவது பிடரியைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றது.

திரு. இராசகுலசிங்கம் வரவேற்புரை ஆற்றினார். கொஞ்சமும் மேடைக் கூச்சம் இன்றி பல நாள் மேடையில் பேசிப் பழகிய அரசியல்வாதி போல் பேசினார். தனது அம்மம்மாவை நன்றியோடு நினைவு கூர்ந்தார். அதுபோல் தான் படித்த இந்துக் கல்லூரி, தன்னை ஆளாக்கிய ஆசிரியர்கள், கைப்பிடித்த துணைவி மணிமேகலை ஊக்குவித்த உடன்பிறப்புக்கள் எல்லோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அரங்கில் ஆடல் அழகிக்கு அடுத்ததாக அவையோர் மனங்களைக் கொள்ளை கொண்டவர் பெங்களுர் மிருதங்க ஆசான் எஸ்.வி. பாலகிருஷ்ணா. மிருதங்கத்துக்குள் இத்தனை இசைநுணுக்கங்கள் இருக்கின்ற சங்கதி அன்றுதான் எனக்குத் தெரிந்தது. மாதவியின் அரங்கேற்றத்தில் தோற்கருவியை வாசித்த தண்ணுமை முதல்வனை மனக் கண்ணில் கொண்டு வந்தது போல மிக நேர்த்தியாக வாசித்தார்.

அடுத்து வயலின் வாசித்த திருமதி கல்யாணி சுதர்சன் மனதைத் தொட்டார். அவரது வாசிப்பில் பட்டறிவின் முத்திரையைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.
யாழினியின் அணிமணி அலங்காரம் (நாடக ஆபரணம், நிருத்ய ஆபரணம்) ஒப்பனை அலங்காரம், தலை அலங்காரம், உடை அலங்காரம் மிக மிக நேர்த்தியாக இருந்தன. நட்டுவனார் இந்தத் துறையில் மிக்க கவனம் செலுத்தியது தெரிந்தது.

பரதமும் இசையும் ஒன்றிணைந்த கலைப் பரம்பரையில் வந்த கலைமாமணி யாதவன் வழக்கம் போல் நன்றாகவே பாடினார். குறிப்பாக பின்னணி இசை இல்லாது பாடும்போது பாடல் வரிகள் தெளிவாக காதில் விழுந்தது. ஆனால் முதல் நாள் இரவு நெடு நேரம் கண் விழித்து ஒத்திகை பார்த்ததோ என்னவோ தூக்கக் கலக்கத்தில் இருந்தவர் போல் காணப்பட்டார்.

எல்லோருக்கும் மேலாக நடன அரங்கேற்றின் பாராட்டுக்குரியவர் நட்டுவனார் நிரஞ்சனா சந்துரு ஆவார். அரங்கில் கொஞ்சம் சிரித்த முகத்தோடு காணப்பட்டால் கண்ணுக்குக் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும்.

சிறப்பு விருந்தினரது பெயரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட பலரும் சரியாக உச்சரிக்க முடியாது வில்லங்கப்பட்டார்கள். ஆங்கிலத்தில் எழுதியவாறே திருமாவலவன் என உச்சரித்தார்கள். இது சின்னத் தவறுதான் என்றாலும் அதனை தவிர்த்திருக்கலாம்.

முதன்மை விருந்தினர் இசை ஆசான் பொன். சுந்தரலிங்கம் பேசும் போது யாழியின் ஆடல் தமிழீழத்திலும் அரங்கேற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் மேடையில் வைத்தே யாழினி வழக்கறிஞருக்கு படிக்க இருக்கிறார் என்ற செய்தி சொல்லப்பட்டதே?

எப்போதும் தமிழில் பேசிவிட்டு ஆங்கிலத்திலும் பேசுவதை வழக்கமாகக் கொண்ட அடிகளார் யோசேப் சந்திரகாந்தன் இரு மொழிகளிலும் வாழ்த்துரை வழங்கினார். வழக்கம் போல் கூற வேண்டியதை இரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு இறங்கிவிட்டார். வந்திருந்தவர்கள் தமிழர், கேட்போர் தமிழர் பின் ஆங்கிலத்துக்கு என்ன அவசியம்? தமிழ் தெரியாத தமிழர்களுக்கு ஆங்கிலம் என்றால் அவர்கள் தமிழ் படிக்காமல் இருந்துவிட அது நல்ல வாய்ப்பாகிவிடாதா?

சிறப்பு விருந்தினர் தொல். திருமாவளவன் முதலில் கலை பற்றிப் பேசினார். தான் கலந்து கொள்ளும் முதல் நடன அரங்கேற்றம் யாழினியுடைய அரங்கேற்றம் என்று சொன்னபோது மிகவும் வியப்பாக இருந்தது. கனடாவில் அவர் சில காலம் இருக்க நேர்ந்தால் ஒவ்வொரு கிழமையும் நடன அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கலாம். அரசியல் பேசும்போது தேர்தல் கூட்டணி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு மட்டும் செய்யப்படுவது, விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவோடு அணி சேர்ந்தாலும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காது, தமிழீழ விடுதலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்றுமே பக்க பலமாக இருப்பார்கள் என்றார்.

தமிழீழ அரசவைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை இந்த அரங்கேற்றத்துக்கென்றே எழுதிய “உலகமே தீர்ப்பு எழுது” என்ற பாடலுக்கு கலைமாமணி யாதவன் இசை அமைத்துப் பாட யாழினி ஆடினது சிறப்பாக இருந்தது.

அரைத்த மாவையே அரையாமல் காலத்துக்கு ஏற்றவாறு “நாம் அழுத கண்ணீர்” என்ற எழுச்சிப் பாடலுக்கு யாழினி ஆடியது பொருத்தமாக இருந்தது.

நன்றியுரையை அன்றைய ஆடல்நாயகி யாழினியே செய்தார். அவரது வாயில் இருந்து ஒரு தமிழ்ச் சொல்லேனும் வராதது மனதுக்கு வலியாக இருந்தது.
அம்மா அப்பா என்ற அழகு தமிழ்ச் சொற்கள் கூட அவர் வாயில் வர மாட்டேன் என்று விட்டது. தமிழில் வணக்கம் நன்றி என்ற இரண்டு சொற்களையேனும் அவருக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையா?
இந்தச் சொற்கள் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கே கைவந்த கலைச் சொற்களாச்சே? உலகில் சிறந்தது நாட்டியக் கலையே! ஆடல் அழகி யாழினியின் அரங்கேற்றம்!
திருமகள்
தை: தத்த தை, தாம்தை, தத்த தை, கிடதகதாம், தித் தாம,; கிடதகதை, தத் தாம் தை,
தாகத ஜம்தரி தா, ததகத ஜம்தரி தை,
ததிகின தோம்-தக ததிகின தோம்-தக திகுததி கிணதோம்
தாம், , தை, தத்த தாம், ,
திகிதக திகிதக திகிதக திகிதக திகிதக திகிதக
திகிதக திகிதக திகிதக திகிதக தளாங்கு தகதிது தோம்
என்ன பார்க்கிறீர்கள்? திருமகள் சில காலம் கழித்து அரங்கேற்றம் பார்த்தது போல் தெரிகிறதா?
நீங்கள் நினைப்பது சரி. கிழமை இறுதியில் செல்வி யாழினியின் அரங்கேற்றம் பார்த்தேன். சுவைத்தேன், களித்தேன், மலைத்தேன், திளைத்தேன் அதுபற்றி எழுதலாம் என நினைத்தேன்! மேலே தந்திருப்து யாழினி ஆடிய அலாரிப்பு சொற்கட்டு!
தமிழ் உணர்வாளர் திரு. இராசகுலசிங்கம் (பாபு) அவர்களின் திருமகள் யாழினியின் அரங்கேற்றம் தங்களுடைய வீட்டு அரங்கேற்றம் என நினைத்து நிகழ்ச்சி தொடங்கு முன்னரே 1,700 பேர் கொள்ளக் கூடிய கலைக்கான ரொறன்ரோ மைய அரங்கத்தை (வுழசழவெழ ஊநவெசந கழச யுசவள ) நிறைத்து விட்டார்கள்.
வழக்கமான பூசை, மங்கள விளக்கேற்றல், அமைதி வணக்கம் நடந்து முடிந்த பின்னர்நட்டுவனார் (நடன ஆசிரியை) தனது மாணவிக்கு இரு கால்களுக்கும் சலங்கை கட்டி விட்டார். இதனை சலங்கை பூசை என்று அழைப்பர். பூசை என்ற தனித்தமிழ் சொல்லை சமற்கிருத சொல் எனக் காட்டுமாறு அதனை பூஜை என வடமொழிப் பற்றாளர்கள் உச்சரிக்கிறார்கள்.
வெண்கலம் செம்ப மற்ற வெள்ளியும் மூன்றிலொன்றால்பங்கிய நஷ்ற்சுரங்கள் பலுகவே யழகாய்ச் செய்தகிண்கிணி தனக்குத் தாரா கணமதி தெய்வமாங்கருங்கயி றதனிற் கோத்திட உறுதியாய் முடிச்சைப் போடே…….
என்று மகபரத சூடாமணி என்கிற நூலில் கிண்கிணி என்கின்ற சலங்கையின் அழகுகள் சொல்லப்பட்டுள்ளது. வெண்கலம், செம்பு, வெள்ளி இம் மூன்றினுள் ஒன்றால் கிண்கிணி செய்யப்பட்டிருக்கும். வலது காலுக்கு நூறுசலங்கையும் இடது காலுக்கு இருநாறு சலங்கையும் கட்டி ஆடுதல் வேண்டும். ஆனால் நாகரிகம் மிகுந்து நேரம் அருமையாகி விட்ட இந்தக் காலத்தில் பாட்டில் சொன்னது போல் யாரும் கிண்கிணி கட்டி ஆடுவதில்லை.
நிகழ்ச்சிகளை சுதர்சன் துரையப்பா தொகுத்து வழங்கினார். சுதர்சன் அரங்கேறிய நர்த்தகர். அதனால் நடனம் பற்றிய தரவுகளை சாங்கோ பாங்கமாக அவ்வப்போது எடுத்து விளக்கினார். ஆனால் அதனை பெரும்பாலும் ஆங்கிலத்தில் சொன்னதுதான் சோகம். நடனம் எங்கள் மண்ணில் விளைந்த ஒரு கலை என்பது உண்மையானால் அந்த மண்ணிற்குச் சொந்தமான தமிழில்தானே அதனை விளக்க வேண்டும்?
இப்போதெல்லாம் நட்டுவனார்கள் நடனத்தையே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள். காரணம் நடனம் கற்கும் மாணவர்களுக்கு தமிழ் தெரியாது!
நிகழ்ச்சி தோடய மங்களத்தோடு தொடங்கியது. ஆடல்மகள் உள்ளே இருந்து வெளியே வருவதற்கு முன்னாள் பாடகரும் பக்கவாத்தியக்காரர்களும் சரியாகச் சேர்ந்து இசைவதற்கும் மங்களத்திற்காகவும் பாடுவதாகும், இதனை மேளம் கட்டுவது என்றும் சொல்வர். இந்த நிகழ்ச்சியை நட்டுவனார் ஒரு மணி நேரம் செய்வார். ஆனால் அது இப்போது அய்ந்து மணித்துளியோடு முடிந்து விடுகிறது,
அடுத்து மலர்வணக்கம் (புஷ்பாஞ்சலி) தொடங்கியது. கைகளில் மலரை ஏந்திக் கொண்டு கடினமான கால்களில் அடைவுகளை (கழழவ ளவநிள) காட்டி அரங்கம் முழுதும் சுற்றி வந்து செய்கும் நடனமாகும். அடவு என்ற சொல் ஆடல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது.
அடுத்து அலாரிப்பு. அலாரிப்பு இல்லாத நடன நிகழ்ச்சியை இன்று பார்க்க முடியாது. அலாரிப்பு என்றால் தயார்படுத்திக் கொள்ளல் என்பதே பொருள். அதனை ஆங்கிலத்தில் றயசஅiபெ-ரி என்று திரு. சதர்சன் மொழிபெயர்;துச் சொன்னார். அலாரிப்பு ஜதியிiனை சொற்கட்டு என்று சொல்வார்கள்.
இந்த இடத்தில் ஒரு ஆடல் மகளுக்கு இருக்க வேண்டிய அழகுகளைச் சற்றுப் பார்க்கலாம்.
மன்னர் முதல் மூன்று குலத்தில் உதித்த சிவந்த நிறமும் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஒளிமுகத்தை உடையவளாகவும் அன்னம் போன்றவளாகவும் அரச கட்டிலின் முன்னே பத்து முழம் விட்டு கீழ்த்திசையில், திரையை நீக்கி, முழுநிலவு போலவும் பூத்த வஞ்சிக்கொடி போலவும் கார்மேகம் திறந்து மின்னல் வெளிப்பட்டது போலவும் விளங்கத் தோன்றுவாள். மிகப்பருத்தல், மிக இளைத்தல், மிக உயரம், மிக குறுகல் இல்லாத உடலும் தக்க வடிவமும் சிறந்த மார்பகங்களுடன் அறிவு உரம் பெற்றவளாயும் தாள சுரஅறிவு, பரந்த நெற்றி, உடல் அமைப்பு, முக மலர்ச்சி இவற்றை உடையவளாய் இருந்தல் வேண்டும். (அபிநய தர்ப்பணம்)
பண்டைய காலத்தில் இருந்து தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும் 64 கலைகளில் ஒன்றான ஆடல்கலையே இன்று பரதம் என அழைக்கப்படுகிறது. பாவம், இராகம், தாளம் என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து “பரதம்” ஆகியது என்று சொல்கிறார்கள். தமிழ் இலக்கியங்களில் இதனை கூத்து, ஆடல், நடம், நர்த்தனம், நிருத்தம் என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இதனை சதிர் என்றும் சின்னமேளம் என்றும் அழைத்தார்கள். அண்மைக்காலமாகவே இந்த நாட்டியம் “பரத நாட்டியம்” எனக் குறிக்கப்பட்டு உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்த மூன்று சொற்களும் நாட்டியத்தின் முக்கிய கூறுகளாகும்.
இந்த நடனத்தை சிவபெருமான் பிரமனுக்கு கற்பித்தார் என்றும், பிரமன் பரதமாமுனிவருக்கு (தண்டு முனிவர்) கற்பித்தார் என்றும், பரதர் அதனை கந்தருவர் அப்சரஸ் முதலிய விண்ணுலக வாசிகளுக்கு கற்பித்தார் என்று கூறப்படுகிறது. சிவபெருமானுக்கே உரித்தான தாண்டவ நடனத்தை சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்க நந்திகேசுவரருக்குக் கற்பித்தார். இவை யாவும் பின்னால் நடனக் கலைக்கு ஒரு தெய்வீகத்தைக் (ஆகமத்தை அருளியவர் சிவபெருமான் என்பது போல) கற்பிக்க நினைத்தவர்களது கற்பனையாகும். பரதக் கலை யாருக்குச் சொந்தம், தமிழருக்கா வடமொழியாளருக்கா? என்ற சிக்கலுக்குள் நான் நுழைய விரும்பவில்லை. அதற்குத் தோதான இடமும் இது இல்லை. ஆனால் ஆடல்மகளிரது உடையை வைத்தே இது யாருடைய கலை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்!
தமிழ்நாட்டில் பரதம் தஞ்சை, திருவாருர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் வளர்ந்து பரவியது. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 11 ஆம் நூற்றாண்டுவரை தேவடியார் (தேவதாசிகள்) எனப்படும் பெண்கள் கோயில்களில் நடனமாடினார்கள். இராசராசன் காலத்தில் ஏராளமான பெண்கள் கோயில்களில் நடனம் ஆடுவதற்கு அமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. இவர்கள் ஆடல், பாடல், இசைக்கருவிகள் முதலியவற்றை முறைப்படி கற்றுத் தேறியவர்கள். குமுதாயத்தில் அவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் திருவாரூர் திருக்கோயிலில் இருந்த உருத்திரக்கணிகையர் குலத்தைச் சேர்ந்த பரவைநாயகியை கண்டு காதலித்து மணந்தார் எனத் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) கூறுகிறது.
பரத நாட்டியத்தில் மட்டுமே கர்நாடக இசையில் உள்ள 35 தாளங்களும் 108 வகையான தாளங்களும் நாட்டிய உருப்படிகளும் உள்ளன.
ஆடல்மகளிருக்கு இயற் தமிழிலும், இசைத் தமிழிலும் ஓரளவு அறிவு இருத்தல் வேண்டும். மொழித் தேர்ச்சி இல்லாவிட்டால் மெய்ப்பாடுகளை சரிவர வெளிக்காட்ட முடியாது.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதையில் ஆடலும் பாடலும் அழகும் இம்மூன்றின் ஒன்று குறைபடாமல் ஏழ் ஆண்டு இயற்றி, பன்னிரண்டாம் அகவையில் மன்னன் முன்னிலையில் மாதவி அரங்கேறினாள். அப்போது மேடையில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.

இருவகைக் கூத்தின் (அகக் கூத்து, புறக் கூத்து) இலக்கணம் அறிந்த ஆடல் ஆசான்.

யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை, ஆடலோடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் பாடக்கூடிய இசை ஆசிரியன்.

இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறிய தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி, வேத்து இயல் பொது இயல் என்று இரு திறத்தின் நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்து, இசைப் புலவன்.

ஆளத்தி வைத்த பண்ணின் தன்மையை முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையைறையும் நீர்மையும் என்னம் பதினோரு கூறுகளையும் அறிந்து, இசையோன்.

தாள நிலையில் எய்த வைத்து ஓசை தன் கவியிடத்தே வைக்க வல்லவனாய், பகைவராலும் செய்யப்பட்ட வசை மொழிகளை அறிந்து, அவை பயிலாத தூய, இனிய சொற்களால் கவி இயற்றும் நாவன்மையும் நல்ல நூலறிவும் மிக்கவனாகிய இயற் தமிழ்ப் புலவன்.

இசைக் கருவிகளில் வல்லவனான தண்ணுமை முதல்வன்.

இசையோன் பாடிய நிலையை உணர்ந்து பண்ணிலக்கணம் பதினொன்றையும் பொருந்த வைத்து, முதல,; நடை, வாரம், கூடை, திரள் என்ற நான்கு நலித்தும் கேடில்லாமல் இளைத்து வளர்ந்து, பாடலினிடத்துள்ள எழுத்துக்களைத் தெளிவாய் பிறருக்குப் புலப்படும் படி எழுத்தெழுத்தாக இயக்கி, குறைவுபடாமல் இசைக்கும் குழலோன்.

இந்த அரங்கில்தான்; மாதவிப் பொன்மயிலாள் அரங்கேறினாள்.
இளங்கோ சொன்ன இயற் தமிழ்ப் புலவன் இன்று காணாமல் போய்விட்டார். இன்று பதங்களை, முத்திரைகளை, தாளத்தை, பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்து ஆடும் வழக்கம் கனடாவில் வந்து விட்டது.

தமிழ்த் தெரியாத பிள்ளைக்கு ஆடல் சொல்லிக் கொடுக்க முடியாது, முதலில் பிள்ளைக்குத் தமிழ் கற்றுக் கொடுங்கள் அதன்பின் ஆடல் பழகலாம் என்று சொல்லக் கூடிய நட்டுவனார்கள் இன்று இருக்கிறார்களா? இசை ஆசிரியர் இரண்டொருவர் இருக்கிறார்கள்.

பரதம் பொழுது போக்குக் கலையல்ல. அது வேதத்தின் ஒரு அங்கம், தெய்வீகக் கலை என்று அரங்கில் சொல்லப்பட்டது. ஆனால் ஆடல் கலை நட்டுவனார்களுக்கு வருவாய் தரும் கலையாகவும் ஆடல் மகளிருக்கு ஒரு மேலதிக பட்டம் தரும் கலையாகவும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

யாழினி ஆடிக்காட்டிய நடனங்களில் மெய்ப்பாடு (நவரசம்) மிகவும் நேர்ந்தியாக இருந்தது. அதனை ஏன் தமிழில் பாடவில்லை என்பது தெரியவில்லை.

உடலின் அசைவுகளால் நடனத்தில் அடைவுகள் தோன்றுகின்றது. அதே போல் முகத்தின் சதைகளின் அசைவினால் வேறுபாடான முகபாவங்கள் தோன்றுகின்றன. இந்த முகபாவங்களில் கண்களின் பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வகையான முகபாவங்களை தொல்காப்பியர் எண்பாண் சுவை என்பார். எட்டு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற இந்த மெய்ப்பாடுகள் ஆவன,

நகை – சிரிப்பு
அழுகை – அவலம்
இழிவரல் - இழிவு
மருட்கை - வியப்பு
அச்சம் - பயம்
பெருமிதம் - வீரம்
வெகுளி - சினம்
உவகை - மகிழ்ச்சி

இவற்றோடு யோகநிலையையும் சேர்த்து வடநூலோர் நவரசம் என வழங்குவர்.

சிரித்த முகபாவம், கர்வமான பார்வை, கூரான பார்வை, இடது அல்லது வலது அரங்கத்தைப் பார்த்தல் ஆகியவை முக்கியமாகும்.
இந்த மெய்யின் புறப்பாடுகளை முகத்தில் கொண்டுவர தமிழிமொழி அறிவு கட்டாயமாகும். அவற்றை ஆங்கிலத்தில் படித்து விளங்கிக் கொண்டு முகபாவம் காட்டுவது பிடரியைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றது. திரு. இராசகுலசிங்கம் வரவேற்புரை ஆற்றி;னார். கொஞ்சமும் மேடைக் கூச்சம் இன்றி பல நாள் மேடையில் பேசிப் பழகிய அரசியல்வாதி போல் பேசினார். தனது அம்மம்மாவை நன்றியோடு நினைவு கூர்ந்தார். அதுபோல் தான் படித்த இந்துக் கல்லூரி, தன்னை ஆளாக்கிய ஆசிரியர்கள், கைப்பிடித்த துணைவி மணிமேகலை ஊக்குவித்த உடன்பிறப்புக்கள் எல்லோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அரங்கில் ஆடல் அழகிக்கு அடுத்ததாக அவையோர் மனங்களைக் கொள்ளை கொண்டவர் பெங்களுர் மிருதங்க ஆசான் எஸ்.வி. பாலகிருஷ்ணா.

மிருதங்கத்துக்குள் இத்தனை இசைநுணுக்கங்கள் இருக்கின்ற சங்கதி அன்றுதான் எனக்குத் தெரிந்தது. மாதவியின் அரங்கேற்றத்தில் தோற்கருவியை வாசித்த தண்ணுமை முதல்வனை மனக் கண்ணில் கொண்டு வந்தது போல மிக நேர்த்தியாக வாசித்தார்.

அடுத்து வயலின் வாசித்த திருமதி கல்யாணி சுதர்சன் மனதைத் தொட்டார். அவரது வாசிப்பில் பட்டறிவின் முத்திரையைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.

யாழினியின் அணிமணி அலங்காரம் (நாடக ஆபரணம், நிருத்ய ஆபரணம்) ஒப்பனை அலங்காரம், தலை அலங்காரம், உடை அலங்காரம் மிக மிக நேர்த்தியாக இருந்தன. நட்டுவனார் இந்தத் துறையில் மிக்க கவனம் செலுத்தியது தெரிந்தது.

பரதமும் இசையும் ஒன்றிணைந்த கலைப் பரம்பரையில் வந்த கலைமாமணி யாதவன் வழக்கம் போல் நன்றாகவே பாடினார். குறிப்பாக பின்னணி இசை இல்லாது பாடும்போது பாடல் வரிகள் தெளிவாக காதில் விழுந்தது. ஆனால் முதல் நாள் இரவு நெடு நேரம் கண் விழித்து ஒத்திகை பார்த்ததோ எஎன்னவோ தூக்கக் கலக்கத்தில் இருந்தவர் போல் காணப்பட்டார்.
எல்லோருக்கும் மேலாக நடன அரங்கேற்றின் பாராட்டுக்குரியவர் நட்டுவனார் நிரஞ்சனா சந்துரு ஆவார். அரங்கில் கொஞ்சம் சிரித்த முகத்தோடு காணப்பட்டால் கண்ணுக்குக் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும்.
சிறப்பு விருந்தினரது பெயரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட பலரும் சரியாக உச்சரிக்க முடியாது வில்லங்கப்பட்டார்கள். ஆங்கிலத்தில் எழுதியவாறே திருமாவலவன் என உச்சரித்தார்கள். இது சின்னத் தவறுதான் என்றாலும் அதனை தவிர்த்திருக்கலாம்.

முதன்மை விருந்தினர் இசை ஆசான் பொன். சுந்தரலிங்கம் பேசும் போது யாழியின் ஆடல் தமிழீழத்திலும் அரங்கேற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் மேடையில் வைத்தே யாழினி வழக்கறிஞருக்கு படிக்க இருக்கிறார் என்ற செய்தி சொல்லப்பட்டதே?
எப்போதும் தமிழில் பேசிவிட்டு ஆங்கிலத்திலும் பேசுவதை வழக்கமாகக் கொண்ட அடிகளார் யோசேப் சந்திரகாந்தன் இரு மொழிகளிலும் வாழ்த்துரை வழங்கினார். வழக்கம் போல் கூற வேண்டியதை இரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு இறங்கிவிட்டார். வந்திருந்தவர்கள் தமிழர், கேட்போர் தமிழர் பின் ஆங்கிலத்துக்கு என்ன அவசியம்? தமிழ் தெரியாத தமிழர்களுக்கு ஆங்கிலம் என்றால் அவர்கள் தமிழ் படிக்காமல் இருந்துவிட அது நல்ல வாய்ப்பாகிவிடாதா?

சிறப்பு விருந்தினர் தொல். திருமாவளவன் முதலில் கலை பற்றிப் பேசினார். தான் கலந்து கொள்ளும் முதல் நடன அரங்கேற்றம் யாழினியுடைய அரங்கேற்றம் என்று சொன்னபோது மிகவும் வியப்பாக இருந்தது. கனடாவில் அவர் சில காலம் இருக்க நேர்ந்தால் ஒவ்வொரு கிழமையும் நடன அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கலாம்.

அரசியல் பேசும்போது தேர்தல் கூட்டணி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு மட்டும் செய்யப்படுவது, விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவோடு அணி சேர்ந்தாலும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காது, தமிழீழ விடுதலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்றுமே பக்க பலமாக இருக்கும் என்றார்.

தமிழீழ அரசவைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை இந்த அரங்கேற்றத்துக்கென்றே எழுதிய “உலகமே தீர்ப்பு எழுது” என்ற பாடலுக்கு கலைமாமணி யாதவன் இசை அமைத்துப் பாட யாழினி ஆடினது சிறப்பாக இருந்தது.

அரைத்த மாவையே அரையாமல் காலத்துக்கு ஏற்றவாறு “நாம் அழுத கண்ணீர்” என்ற எழுச்சிப் பாடலுக்கு யாழினி ஆடியது பொருத்தமாக இருந்தது.

நன்றியுரையை அன்றைய ஆடல்நாயகி யாழினியே செய்தார். அவரது வாயில் இருந்து ஒரு தமிழ்ச் சொல்லேனும் வராதது மனதுக்கு வலியாக இருந்தது.

அம்மா அப்பா என்ற அழகு தமிழ்ச் சொற்கள் கூட அவர் வாயில் வர மாட்டேன் என்று விட்டது.

தமிழில் வணக்கம் நன்றி என்ற இரண்டு சொற்களையேனும் அவருக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையா? இந்தச் சொற்கள் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கே கைவந்த கலைச் சொற்களாச்சே?

கலைக்கான ரொறன்ரோ மையம் (Toronto Centre for Performance Arts) வழங்கிய ஒலி ஒளி மெச்சத்தக்கதாக இருந்தது.

0 Comments:

Post a Comment

<< Home