Sunday, March 02, 2008

தமிழில் வழிபாடு செய்ய மறுக்கும் பார்ப்பனர்களது பூநூலை அறுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

(தமிழ்நாட்டில் சமய குரவர்கள் பாடிய தேவார திருவாசகத்தை சிதம்பரம் கோயில் அம்பலத்தில் நின்று பாட தீட்சதகர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக தடை செய்து வருகிறார்கள். கோயில் கட்டியவன் தமிழன். சிற்பங்களைச் செதுக்கியவன் தமிழன். ஓவியங்களைத் தீட்டியவன் தமிழன். ஆனால் அவனால் கர்ப்பககிரகத்தின் உள்ளே அல்ல வெளியில் அம்பலத்தில் நின்று தேவாரம் திருவாசகம் பாட முடியாத இழிநிலை.

இதிலிருந்து என்ன தெரிகிறது. கோயிலும் இந்துக் கடவுளரும் சமற்கிருதமும் தமிழருக்கு அந்நியமானவை. தமிழன் ஆரியரின் கற்பனைக் கடவுளரை உண்மைக் கடவுள்கள் என நினைத்து அர்ச்சனை, அபிசேம், தேர், திர்த்தம், திருவிழா செய்து தனது பொருளையும் காலத்தையும் வீணாகச் செலவழிக்கிறான்.

தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை இல்லை. தமிழிலும் அர்ச்சனை என்ற அறிவித்தல் பலகைதான் கோயிலகளில் வைத்திருக்கிறார்கள். பெரும்பான்மையான தமிழக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யமாட்டார்கள். கேட்டால். சமஸ்கிருத மொழிக்கு மட்டும் மந்திரம் உண்டு தமிழிமொழிக்கு அந்த ஆற்றல் கிடையாது என்கிறார்கள்.

நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப என்ற தொல்காப்பியர் 2,500 ஆண்டுகளுக'கு மந்திரம் என்றால் என்ன என வரைவிலக்கணம் வகுத்திருப்பது பலருக்குத் தெரியாதிருக்கிறது. . இதே நிலை ஆங்கில மொழிக்கும் ஒரு காலத்தில் இருந்ததை நாம் அறிய வேண்டும். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் மேட்டுக் குடிகளின் மொழியாகவும்- வழிப்பாட்டு மொழியாகவும் இலத்தீன் இருந்தது. அப்போது மக்களின் மொழியாக இருந்த ஆங்கிலத்தில் வழிபாடு செய்யவேண்டும் அல்லது உயர்கல்வி பயில வேண்டும் என்று யாராவது சொன்னால் அவர் அரசின் எதிரியாகவும், மதத்தின் விரோதியாகவும் கருதப்பட்டார்.

பொதுமக்களிடம் இது குறித்து பய உணர்வு பரவி இருந்ததாக வரலாறு கூறுகிறது.

முதலாவது எலிசபெத்தின் தந்தையாகிய எட்டாம் ஹென்றி மன்னன் காலத்திலே ஆங்கில நாட்டு மதக் கொள்கையில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. எட்டாம் ஹென்றி ஒருவர் பின் ஒருவராக ஆறு மனைவியரை மணந்தான். முதல் மனைவியை நீக்கிவிட்டு இரண்டாம் மனைவியை முறையாகத் திருமணம் செய்து இராணியாக்குவதற்கு அனுமதி கேட்டு சமயத் தலைவராகிய உரோமாபுரிப் பாப்பரசரிடம் விண்ணப்பித்தான்.

கத்தோலிக்க கிறிஸ்தவ சமயக் கொள்கைப்படி முறையாக மணந்த மனைவியை மணமுறிவு செய்தல் மத விரோதமானது. ஆதலின், பாப்பரசர் எட்டாம் ஹென்றி மன்னன் மறுமணம் செய்வதற்கு ஒப்புதல் கொடுகக மறுத்தார். இதனால் வெகுண்டெழுந்த மன்னன் உரோம் நாட்டு பாப்பரசருட்ன் இருந்த கத்தோலிக்க சமயத் தொடர்பை அறுததுக் கொண்டு ஆங்கில திருச்சபையை உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பைத் தானே எடுத்துக் கொண்டான்.

அடுத்து வழிபாட்டை இலத்தீனில் இருந்து ஆங்கில மொழிக்கு மாற்றினான். பாதிரிமார்கள் ஆறு மாதத்துக்குள் ஆங்கிலத்தில் வழிபாடு செய்யக் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தவறினால் அவர்களது சீருடை களையப்பட்டு வீட்டுக்கு அனுப்பப் படுவர் என எச்சரிக்கை செய்தான். இதனால் இலத்தீன் ஒழிந்து ஆங்கில வழிபாடு நடைமுறைக்கு வந்தது. இது போலவே தமிழக அரசு தமிழை வழிபாட்டு மொழியாக சட்டப்படி அறிவிக்க வேண்டும். தமிழில் வழிபாடு செய்ய மறுக்கும் பார்ப்பனர்களது பூநூலை அறுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் கடவுள் கோபித்துக் கொள்ள மாட்டார். அவருக்கு மொழிச்சிக்கல் இல்லை. "அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் சொற்றமிழில் எனைப் பாடுக" என சுந்தரரை சிவன் கேட்பதாகச் சேக்கிழார் பாடியிருக்கிறார். நாயன்மார்கள் ஆரியம் கண்டாய் தமிழ் கண்டாய் என்றுதான் பாடியிருக்கிறார்கள.
(Nakkeeran)

தடுத்த தீக்ஷிதர்கள்-சிதம்பரத்தில் பரபரப்பு!
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2008

சிதம்பரம்: தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பலமேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடியவர்களை தடுத்த தீக்ஷிதர்களை காவல்துறையினர் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்சிதர்கள் தடை போட்டனர்.இதையடுத்து உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுத்து அறிவிக்கலாம் என தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை பாடலாம் என அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராடி வரும் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலரும் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.கோவிலில் மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஆறுமுகச்சாமி தலைமையில் உள்ளே சென்ற ஓதுவார்கள், திருச்சிற்றம்பல மேடையில் நின்றபடி தேவாரம் பாட முயன்றனர். ஆனால் அவர்களை தீக்சிதர்கள் கும்பலாக வந்து தடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து எஸ்.பி. பிரதீப் குமார் உள்ளிட்ட காவல்துறையினர் உள்ளே நுழைந்தனர். அவர்களையும் தீக்சிதர்கள் தடுத்தனர். மேல் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் போக வேண்டும் என்று கூறினர்.இதையடுத்து மேல் சட்டையைக் கழற்றி விட்டு உள்ளே புகுந்த போலீஸார், அங்கு தகராறு செய்த தீக்சிதர்களை குண்டுக் கட்டாக தூக்கி வந்து கோவிலுக்கு வெளியே விட்டனர்.இதைத் தொடர்ந்து ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் மகிழ்ச்சியும், பக்திப் பரவசமுமாக தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடி மகிழ்ந்தனர்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. (thats tamil)

சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடலாம்-அரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2008

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்ஷிதர்கள் தடை போட்டு விட்டனர்.இதை எதி்ர்த்து போராட்டங்கள் நடந்ததையடுத்து தேவாரம் பாடலாம், ஆனால் மேடையில் இருந்து பாடக் கூடாது, கீழே உள் மண்டபத்தில் இருந்தபடிதான் பாட வேண்டும் என்றனர்.இந் நிலையில் திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி உத்தரவிட்டார்.இதையடுத்து தீக்ஷிதர்கள் சார்பில் அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுத்து அறிவிக்கலாம் என தீர்ப்பளித்தது.இதைத் தொடர்ந்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, கால பூஜை முடிந்த பின்னர், அடுத்த பூஜைக்கு இடையே உள்ள நேரத்தில் திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி 30 நிமிடங்களுக்கு தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம். யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் இவற்றைப் பாடலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடப் போவது குறித்து முன்கூட்டியே கோவில் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவு தெரிவிக்கிறது.இதன் மூலம் இதுவரை தேவாரம், திருமறை ஆகிய தமிழ்ப் பாடல்களைப் பாட முடியாமல் தவித்த வந்த பக்தர்களுக்கு பெரும் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தீக்ஷிதர்கள் அடாவடியாக நடந்து கொள்வதாக கூறிப் பல்வேறு சிவாச்சாரியார்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டவை பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன என்பது நினைவிருக்கலாம்.

0 Comments:

Post a Comment

<< Home